India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் அரசு விதிகளை மீறும் கடைகளில் உரங்கள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கடந்த ஓராண்டில் உண்மை இருப்பிற்கும், பி.ஓ.எஸ். கருவியில் உள்ள இருப்பிற்கும் வேறுபாடு இருந்த 13 கடைகள், உரிமத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களை தவிர பிற நிறுவனங்களிடமிருந்து உரங்களை பெற்று விற்பனை செய்த 27 கடைகளுக்கும் உர விற்பனை செய்ய தடைவிதித்துள்ளதாக மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி 2 பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கு ஜூலை 8ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இந்த தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவா்கள் விண்ணப்ப நகலை சமர்ப்பித்து இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம். விவரங்களுக்கு 6379268661 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 2 மற்றும் குரூப் 2எ தேர்வுக்கான 2327 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்
தேனி மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 162 அரசு புறம்போக்கு ஊரணி, குளம் மற்றும் கண்மாய்கள் உள்ளன. அவற்றில் இருந்து களிமண் மற்றும் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 25 வேட்பாளர்களின் இறுதிச் செலவு கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் செலவின பார்வையாளர் கனிஸ்ட்யாசுவிடம் செலவின கணக்குகள் ஒப்படைக்கப்பட்டன. இப்பணி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது தேர்தல் செலவின கணக்குகளை சரிபார்க்கும் பணியை தேர்தல் கணக்கு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தேனி மாவட்ட அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் நேரடிச் சேர்க்கை நடைபெறுகிறது. நேரடி சேர்க்கைக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 15. தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை ஜுலை 15 வரை நடைபெறுகிறது. 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.750, சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ஏதும் இல்லை. 9344014240 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் இன்று மாவட்ட தலைவர் கு.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அவரவர் பணி செய்யும் இடங்களில் இந்த போராட்டத்தில் அலுவலர்கள் ஈடுபட்டனர். கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் வரும் 10ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி: சர்வதேச நெகிழிப் பை இல்லா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 7.ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களின் பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை எடுத்துக்கூறி, நிலையான மாற்று வழிகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவித்தலாகும். இதன் ஒரு பகுதியாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று தேனி கலெக்டர் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பில் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்படுவதாகவும், எனவே அப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என தனது கோரிக்கை மனுவினை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.