Theni

News March 4, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று(மார்ச்.3) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவில் காவல் உதவி தேவைப்படுவோர் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

News March 3, 2026

தேனி : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

தேனி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

தேனி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News March 3, 2026

தேனி: எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

image

மதுரை, புதுச்சேரி ,காரைக்கால் உள்ளிட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) நிரப்பப்பட உள்ள 2,551 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.9,300 – 34,800 வழங்கப்படும் நிலையில் இது குறித்த முழு விவரங்களை <>இங்கே கிளிக்<<>> செய்து தெரிந்துகொள்ளலாம்.

News March 3, 2026

தேனியில் மகளிர் தின மாரத்தானில் பங்கேற்க அழைப்பு

image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் மை பாரத் தேனி இணைந்து பெண்களிடையே விளையாட்டை ஊக்குவிக்க வரும் மார்ச் 8-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஓட்டப்பந்தயப் போட்டிகளை நடத்துகின்றன. பங்கேற்க விருப்பமுள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் 73392 26004 என்ற எண்ணில் மார்ச் 6-ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

தேனி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..

News March 3, 2026

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்:

image

தேனி மாவட்ட அணைகளின் (மார்.03) நீர்மட்டம்: வைகை அணை: 42.26 (71) அடி, வரத்து: 128 க.அடி, திறப்பு: 972 க.அடி, பெரியாறு அணை: 116.50 (142) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 444 க.அடி, மஞ்சளார் அணை: 46.60 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 110.54 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.

News March 3, 2026

தேனி: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

image

தேனி மாவட்டம், மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அந்த அணியில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இதில் சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட ஏராளாமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 3, 2026

தேனி: பெண் தீக்குளித்து தற்கொலை

image

தேனி மாவட்டம், ராஜதானி பகுதியை சேர்ந்தவர் மீனா (46). இவர் கடந்த மூன்று வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக மருத்துவமனையில் கவுன்சிலிங் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனா தனக்குத்தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 3, 2026

தேனி: குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை.!

image

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் முத்துலட்சுமி (27). இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது வரை குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த முத்துலட்சுமி சில தினங்களுக்கு முன்பு விஷமருந்தி உள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!