Theni

News August 14, 2024

சிறுதானிய சாகுபடிக்கு 40% உழவு மானியம்

image

தேனியில் சிறுதானிய சாகுபடி அதிகரிப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 40% மானியம் அதாவது ஒரு ஹெக்டேருக்கு ரூ.5400 வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 200 ஹெக்டேர் சிறுதானிய சாகுபடிக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் பெறுவது தொடர்பான விபரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்களை அணுகி விபரம் பெறலாம் என வேளாண் துறையினர் அறிவித்துள்ளது.

News August 14, 2024

முருங்கை பிசின் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

image

தேனி விவசாயிகள் முருங்கை காய்களில் ஏற்படும் பிசின் நோயை தடுக்க முருங்கை சாகுபடி செய்த பகுதியில் 1 ஏக்கருக்கு 7 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். சிட்ரோனெல்லா எண்ணெய், யூகலிப்படஸ் எண்ணெய், வினிகர் பயன்படுத்தலாம். காய்கள் 50% காய்த்த நிலையில் நிம்பிசைடின் 1 லிட்டருக்கு 3மி.லி. வீதம் கலந்து தெளிக்கலாம். 35 நாட்கள் இடைவெளிக்குப்பின் 2வது முறை தெளிக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News August 14, 2024

தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

News August 14, 2024

சிறுதானிய சாகுபடிக்கு 40% உழவு மானியம்

image

தேனியில் சிறுதானிய சாகுபடி அதிகரிப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 40% மானியம் அதாவது ஒரு ஹெக்டேருக்கு ரூ.5400 வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 200 ஹெக்டேர் சிறுதானிய சாகுபடிக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் பெறுவது தொடர்பான விபரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்களை அணுகி விபரம் பெறலாம் என வேளாண் துறையினர் அறிவித்துள்ளது.

News August 14, 2024

சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சிறப்பு பஸ்கள்

image

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை காலை நடைபெற உள்ளது. இதில் போலீசார் அணிவகுப்பு, பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரிந்த போலீசார், அரசுத்துறை அலுவலர்கள் 140 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News August 14, 2024

ஆக.16ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக.16ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனர். மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 04546-254510, 94990 55936 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News August 14, 2024

கோவில்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள கோவில்பட்டியில் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேனி மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2024

தேனி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடலா.?

image

தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் சுதந்திர தினம் அன்று மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டு வருகின்றனர். அந்தவகையில், தேனி மாவட்டத்திலும் மதுக்கடைகள் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 13, 2024

அரசின் சிமெண்ட் மூடைகளைப் பெற்று பயன்பெறலாம்

image

தேனி மாவட்டத்தில் அரசின் சிமெண்ட் மூட்டை ரூ.216 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகள் பழுது நீக்கும் பணி என்றால் வீ.ஏ.ஓ., சான்றிதழ் பெற்று வந்தால் 25 மூடைகள், புதிய கட்டங்களுக்கு என்றால் கட்டட அனுமதி சான்றுடன் விண்ணப்பித்தால் அதிகபட்சமாக 700 மூடை வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களை அணுகலாம் என தேனி நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

குண்டா் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது

image

தேனி பழனிசெட்டிபட்டி போலீசாரால் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக சவுக்கு சங்கர் மே-4 அன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ஷஜீவனாவுக்கு தேனி எஸ்.பி சிவப்பிரசாத் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடக்க தேனி ஆட்சியர் நேற்று (ஆக.12) உத்தரவிட்டார்.

error: Content is protected !!