Theni

News August 25, 2024

ரூ.55 லட்சம் மோசடி இளைஞர் கைது

image

தேனி காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன், 52. கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தும் தனசேகரன் ரூ. 100 கோடி கடனுக்கு முன்பணமாக, 1 கோடி செலுத்தனும் என்றார். கண்ணன் தவணையாக, ரூ.89 லட்சம் வழங்கினார். கடன் பெற்றுத் தராமல் ஏமாற்றினார். பணத்தை திரும்பி கேட்ட போது, ரூ.34 லட்சம் கொடுத்த மீதித்தொகை,ரூ. 55 லட்சம் தராமல் கொலை மிரட்டல் விடுத்தார்.தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனசேகரனை கைது செய்தனர்.

News August 24, 2024

30 கிலோ கஞ்சா பறிமுதல்: மூன்று பேர் கைது

image

உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டுவேல் தலைமையிலான போலீசார் நேற்று (ஆக.23) கம்பம் கோம்பை ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற இளையேந்திரன், சுரேஷ், வனராஜ் ஆகிய 3 பேர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பையில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்த கம்பம் வடக்கு போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 24, 2024

சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம்

image

கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி என்பவரிடம் டிஜிட்டல் கைது என கூறி நூதன முறையில் டெல்லியை சேர்ந்த அபிஜித்சிங் என்பவர் ரூ.84,50,000 மோசடி செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட அபிஜித்சிங்கை கைது செய்து தேனி அழைத்து வந்தனர். தொடர் நடவடிக்கையாக அவர் மீது நேற்று (ஆக.23) குண்டர் தடுப்பு சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News August 24, 2024

கடன் தொல்லையால் கர்ப்பிணி மனைவி, மகள் கொலை

image

அரண்மனைபுதூர் பகுதியில் சதீஷ்குமார்,அஜித்தா தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது நேற்று இவர்களது வீட்டில் சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு மனைவி, மகள் கழுத்தறுக்கப்பட்டு இறந்துகிடந்தனர். இந்நிலையில் நிதிநிறுவனத்தில் ஏற்பட்ட கடன்தொல்லையால் சதீஷ்குமார் ஆறு மாத கர்ப்பிணி மனைவி, மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்ததார் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

News August 24, 2024

தேனியில் லோன் மேளாக்கள் ஆட்சியர் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை பொருளாதாரம் மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெறுவதற்கு லோன் மேளாக்கள் நடைபெற உள்ளது. இதில் தனிநபர் மற்றும் குழுகடன் பெற விருப்பமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினர் உரிய ஆவணங்களுடன் ஆக.29 அன்று நடைபெற உள்ள முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

கணக்கு புத்தகங்கள் பராமரித்தால் சிரமங்களை தவிர்க்கலாம்

image

தேனியில் வரி செலுத்துவோர் அனைவரும் தினசரி கணக்கு புத்தகம் பராமரிப்பு, செலவின விபரங்களை பதிவு செய்வது, முதலீட்டு விபரங்களை கணக்கில் இணைப்பது, கையிருப்பாக தங்கம், ரொக்கம் வைத்திருந்தால் அந்த விபரங்களை பதிவு செய்வது உள்ளிட்ட 4 மிக முக்கிய அம்சங்களை தொடர்ந்து பராமரித்து நிர்ணயித்த தேதிக்கு முன் வரித்தாக்கல் செய்து பண இழப்பை தவிர்க்குமாறு தேனி மாவட்ட வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2024

ஆதிதிராவிட பள்ளியில் தற்காலிக பணி

image

தேனி மாவட்டத்தில் 2024-25 கல்வி ஆண்டில் ஆதிதிராவிட நலத்துறை கீழ் இயங்கி வரும் குன்னூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளார். இதனால் அப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.18,000 அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News August 23, 2024

65 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக ஆண்டிப்பட்டி வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஆக.1 தேதி 56.20 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 65 அடியாக உயர்ந்துள்ளது. 66 அடியில் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம். இதற்காக நீர்வரத்து 24 மணி நேரமும் நீர்வளத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

News August 23, 2024

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு

image

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு தேனி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு, 04546-251030, 9159668240 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News August 23, 2024

விநாயகர் சிலைகளை கரைக்கப்படுவதற்கு கட்டுப்பாடுகள்

image

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, சின்னமனூர், கம்பம், போடி, பகுதியில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அச்சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழி முறைகள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்க விதி முறைகளை கடைபிடிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் ஷஜீவணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!