India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தி, தமிழ்நாட்டு மக்களைத் தலைநிமிர்ந்து நடைபோக வித்திட்ட நம் பேரறிஞர் அண்ணா 56-வது நினைவு நாளில் அண்ணாவின் கொள்கைகளை வென்றெடுப்போம் என உறுதி ஏற்போம் என்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் புகழாரம் சூட்டினார். மேலும் #RememberingAnna என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.

தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கக்கன்ஜீ காலனியை சேர்ந்தவர் அமர்நாத். இவர் 2021ல் வீட்டு மனை ரசீது கேட்டு ரூ.300 செலுத்தி விண்ணப்பித்திருந்தார். ரசீது வழங்கவில்லை.நகராட்சிக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டில் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ரசீது 1 மாதத்திற்குள் தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை செம்பனார்கோவில் தாமரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் குடியரசு தின விழா மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் தேனி கம்மவார் மெட்ரிக் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் ஹரி பிரசாத், தேனி நாடார் மெட்ரிக் பள்ளி 8ம் வகுப்பு மாணவி இருவரும் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தனர். இருவரையும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.

தேனி மாவட்டத்தில் இன்று 02.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மதுரையில் இருந்து போடி வரை ரயில்வே பாதை மின் மயமாக்கும் பணி நிறைவு பெற்று இன்று(பிப்.2) மதுரை (டூ) போடி, போடி (டூ) மதுரைரயில் சோதனை ஓட்டம் இன்று காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் நடக்கிறது. இதற்காக தண்டவாளங்களில் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின் வயர்களில் 25ஆயிரம் வோல்ட் மின்சாரம் செல்வதால் பொதுமக்கள் தண்டவாளங்களை கடக்கும் போது கவனமுடன் கடந்து செல்ல ரயில்வே துறை அறிவுறுத்தி உள்ளது.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா ஆலோசனையின் படி, மாவட்ட உணவு வணிகர் நல அலுவலர் விடுத்துள்ள செய்தியில்; மாவட்டத்தில் ஹோட்டல், மளிகை, பேக்கரி, இறைச்சி, டீ கடைகள், சாலையோர உணவுக் கடைகள் வைத்து நடத்துபவர்கள் உணவு வணிகர் லைசென்ஸ் பெற வேண்டும். அன்னதானம் செய்தாலோ அதற்கு உணவு தடுப்பு அலுவலரிடம் லைசென்ஸ் பெற வேண்டும் என உணவு வணிகர் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று (பிப்.01) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில் முனைவோருக்கான அரசியல் திட்டங்கள் மானியங்களுடன் வங்கி கடன் உதவிகள், சுய வேலைவாய்ப்பு தேவைகள் குறித்து ஒருநாள் விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிக்கும் நிகழ்ச்சி கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

கதிர்நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகள் சௌமியா (24). இருக்கும் கம்பத்தை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று (ஜன.31) திருமணம் நடைபெற்ற நிலையில் தம்பதியினரை பரமேஸ்வரன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்பொழுது சௌமியா பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்டிபட்டி ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் கோடை சாகுபடிக்கு ஏற்ற அதிக மகசூல் தரும் மேம்படுத்தப்பட்ட கம்பு, உளுந்து, குதிரைவாலி, பருத்தி விதைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விவசாயிகள் இதனை 50 சதவீத மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம். தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கான ஆவணங்களை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி விதைகளை வாங்கி பயன்பெறலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.