India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசு 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இன்று பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷஜீவனா அரசு கூடுதல் செயலாளர், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சியின் ஆணையாளராக இருந்து வந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று 08.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனி நபர் & அமைப்புகளை சார்ந்த 100நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது & தலா ரூ.1 லட்சம் வீதம் காசோலை வழங்க உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தகுதியான நபர்கள் மாசுகட்டுப்பாட்டு வாரிய இணையதளம் www.tnpcb.gov.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்*ஷேர்

தேனி மாவட்ட அணைகளின் (பிப்.08) நீர்மட்டம்: வைகை அணை: 64.80 (71) அடி, வரத்து: 334 க.அடி, திறப்பு: 369 க.அடி, பெரியாறு அணை: 119.40 (142) அடி, வரத்து: 148 க.அடி, திறப்பு: 556 க.அடி, மஞ்சளார் அணை: 43.35 (57) அடி, வரத்து: 16 க.அடி, திறப்பு: 75 க.அடி,
சோத்துப்பாறை அணை: 99.87 (126.28) அடி, வரத்து: 4.5 க.அடி, திறப்பு: 25 க.அடி, சண்முகா நதி அணை: 34.70 (52.55) அடி, வரத்து: 2 க.அடி, திறப்பு: 14.47 க.அடி

தேனி அப்பிப்பட்டியை சோ்ந்தவா் வேல்மணி. இவர் ராணி என்ற பெண்ணை தாக்கிய வழக்கில் சிறை சென்று பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தெருவில் நடந்து சென்ற வேல்மணியிடம், எனது அத்தை ராணியை நீ எப்படி தாக்கலாம் எனக் கூறி அவரை அரிவாளால் சிவச்சந்திரன் என்பவர் வெட்டி உள்ளார். இதில் வேல்மணி உயிரிழந்தார். ஓடைபட்டி போலீசார் சிவச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி உப்பார்பட்டி ரேஷன் கடை, பெரியகுளம் இ.புதுக்கோட்டை கிராமம் முருகமலைநகர் ரேஷன்கடை, ஆண்டிபட்டி போடிதாசன்பட்டி ரேஷன்கடை, உத்தமபாளையம் லோயர்கேம்ப் பளியன்குடி ரேஷன்கடை, போடி போ.நாகலாபுரம் ரேஷன் கடை ஆகிய இடங்களில் குறைதீர் கூட்டங்கள் இன்று (பிப்.8) நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் புதிய ரேஷன்கார்டு, பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக மனு அளிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று 07.02.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜ் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்களை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழி குறித்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஹோட்டல் டீக்கடை பேக்கரி உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் காலாவதியான பொருட்கள் சுமார் 20195 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து 15 ஆயிரம் ரூபாய் உணவு பாதுகாப்பு துறை மூலம் அபராதம் விதித்தனர்.

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் தனியார் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் எதிர்வரும் 11-ம் தேதி வள்ளலார் தினத்தை முன்னிட்டு,அன்றைய தினத்தில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என ஆணையிடப்பட்டுள்ளது.மேற்காணும் நாளில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி உள்வட்டம், கோவிந்தநகரம் வருவாய் கிராமம், குப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஏதிர்வரும் 12.02.2025-ஆம் தேதி புதன்கிழமையன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.எனவே, தேனி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் கொடுத்து பயன்படலாம் என ஆட்சித் தலைவர் ஆர்.வி ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.