India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூடலூர் பகுதியை சேர்ந்த நாகராணி என்பவர் தனது வீட்டின் அருகில் வசித்து வரும் நடராஜன் (80) என்பவர் தனது 7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2020 கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடலூர் போலீசார் நாகராஜனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று நடராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு இன்று தேனி மாவட்ட எஸ்பி அலுவலக கூட்டரங்கில் எஸ்பி சிவபிரசாத் தலைமையில் ஏடிஎஸ்பி சுகுமார் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விநாயகர் சிலைகளை எவ்வாறு வழிபடுவது, சிலைகளை எப்படி கரைப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை செய்தனர். இந்து எழுச்சி முன்னணி, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.
தேனி தாலுகா அலுவலகம் அருகே உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 70 கடைகள் உள்ள நிலையில் அதில் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதில் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், பொதுமக்கள் காய்கறி மற்றும் பழங்கள் வாங்கி செல்கின்றனர். கடந்த மாதத்தில் 1090 டன் காய்கறிகள் ரூ.4.60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.
சின்னமனூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடவு செய்ய “நொட்சி கன்றுகள்” இலவசமாக வழங்கப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார் நகல்களை சின்னமனூர் வேளாண் விரிவாக்க மையத்தில் கொடுத்து நொட்சி கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என வேளாண் விரிவாக்க மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுருளி அருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்து வருகின்றது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கெம்மாரம்பாளையம் பகுதியில் யானைகள் தொந்தரவை தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது போல் சுருளி அருவியிலும் பயன்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி பாதுகாப்புக் குழு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் செப்.13க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. நிறைவு செய்த விண்ணப்பத்தை மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாவட்ட நீதிமன்றம், லட்சுமிபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட நீதிபதி தகவல் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று (செப்.,3) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மதி சிறகுகள் தொழில் மையம் செயல்படுகிறது. இங்கு தொழில் கருத்துருவாக்கம், அரசுத்துறை திட்டங்கள், வங்கிகளில் இருந்து கடன் பெறுதல், வழிகாட்டுதல், சந்தை படுத்துதல், வணிக குறியீடு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இ-சேவை, ஜி.எஸ்.டி. சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி போலீசார் கடந்த 26.8.24 அன்று திம்மரசநாயக்கனூர் அருகேயுள்ள காவல் சோதனை சாவடியில் வாகன தனிக்கையின் ஈடுபட்ட போது அனுமதியின்றி ஆற்று மணலை ஏற்றி வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று திருமலாபுரத்தை சேர்ந்த சந்துரு (23), குன்னூர் கிருபாகரன் (25) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டத்தில் தாட்கோ மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து தமிழக அரசின் சிறப்புத்திட்டமான தூய்மைப் பணியாளர்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டத்தில் 90% மானியத்துடன் கூடிய தலா ரூ.2.50 லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெறுவதற்கான ஆணைகளை 12 பயனாளிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். உடன் தாட்கோ மேலாளர் சரளா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.