Theni

News February 14, 2025

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி

image

மேலக்கூடலுாரை சேர்ந்த தமிழரசி என்பவர் தனது வீட்டருகே உள்ள சண்முகப்பிரியா, அவரது மகள்கள் மவுனிகா, அஜிதா, மகன் தீபக்ராஜ், அஜிதாவின் கணவர் கர்ணன் ஆகியோர் இணைந்து தீபாவளி சீட்டு நடத்தி, 40 பேரிடம், ரூ.23.14 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சண்முகப்பிரியா, மவுனிகா, அஜிதா, கர்ணன் ஆகியோரை போலீசார் நேற்று (பிப்.13) கைது செய்தனர்.

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி காலிபணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள் நாளை(பிப்.14). <<-1>>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கவும் *பிறரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்

News February 13, 2025

தேனி மாவட்டத்தில் 934 பேருக்கு பட்டா வழங்க பரிந்துரை

image

தேனி: அமைச்சர் சாத்துார் ராமசந்திரன் வருவாய்த்துறை சார்பில் நகர் பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்காக தேனி மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் இருந்து 934 பேருக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 13, 2025

யாசகம் பெறும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை

image

தேனி மாவட்டத்தில் பல்வேறு பஸ் ஸ்டாண்டுகள், கடைவீதிகளில் குழந்தைகளை வைத்தும், சில குழந்தைகளும் யாசகம் பெறுவது தொடர்கிறது. இவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து செல்ல குழந்தைகள் நலத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் குழந்தைகளை வைத்து யாசகம் பெறுதல், குழந்தைகள் எங்கேயும் துன்புறுத்தப்பட்டால் 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 13, 2025

தேனியில் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

தேனி மாவட்டத்தில் 5 காவல் உதவி ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தேனி மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் நேற்று உத்தரவிட்டுள்ளார். தேனி மகளிா் காவல் நிலைய எஸ்.ஐ மகேஸ்வரி அல்லிநகரத்திற்கும், ராயப்பன்பட்டி எஸ்.ஐ அருண்பாண்டி பழனிசெட்டிபட்டிக்கும், கண்டமனூா் எஸ்.ஐ மலைச்சாமி தேனிக்கும், பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ மணிமாறன் தேவாரத்திற்கும், தேவாரம் எஸ்.ஐ தெய்வகண்ணன் பெரியகுளத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News February 12, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 12.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 12, 2025

தேனி:ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் 

image

தேனி மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக குறைகளை பரிசை நிலை செய்து ஒரு டின் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் அனைவரும் மார்ச்- 30  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

News February 12, 2025

தேனியில் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்; அறிவிப்பு

image

தேனி-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி எதிர்வரும் பிப்-16  முதல் வழித்தடம் மாற்றப்படுகிறது.மதுரையிலிருந்து தேனி செல்லும் வாகனங்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் முதல் இரயில்வே கேட்வரை ஒருவழி பாதையில் செல்ல வேண்டும்.தேனியிலிருந்து மதுரை செல்லும் வாகனங்கள் தொழிற்பயிற்சி நிலையம் அருகில் திட்டசாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

News February 12, 2025

திருப்பரங்குன்றத்தில் ஆடு அறுப்பது வழக்கம்: தங்கதமிழ் செல்வன்

image

திருப்பரங்குன்றம் மலை குறித்து நான் பேசிய விவகாரத்தில் ஒரு சிலர் அரசியல் லாபத்திற்காக இப்பிரச்னையை பூதாகரமாக்கி வருகின்றனர். அங்குள்ள இஸ்லாமியர்கள் எனது பங்காளிகள். அங்கு முஸ்லிம்கள் ஆடு, கோழி அறுப்பது தொன்றுதொட்டு வரக்கூடிய ஒரு பழக்கம். இதை யாரும் மறுக்க முடியாது என்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

News February 12, 2025

13 வயது சிறுமி திருமணமாகி கர்ப்பம் – 4 பேர் மீது வழக்கு

image

கடமலை, மயிலை BDO மலர்க்கொடிக்கு கிடைத்த தகவலின்படி சிறப்பாறை கிராமத்திற்கு சென்று விசாரித்தபோது, சந்திரசேகர் – சுவேதா தம்பதியரின் 13 வயது மகளுக்கு அதே ஊரைச் சேர்ந்த சடப்பாண்டி மகன் பிரவீன் குமாருடன் 7.11.24 அன்று குழந்தை திருமணம் நடைபெற்றது தெரிய வந்தது. தற்போது அக்குழந்தை 3 மாத கர்ப்பமாக உள்ளதால் 4 பேர் மீதும் BDO கொடுத்த புகாரின்பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!