India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஒருபோக பாசன நிலங்களுக்காக முறை பாசனத்தின் படி தண்ணீரின் இருப்பை பொருத்தும் மழை அளவை பொருத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்ட தண்ணீர் இன்று காலை மீண்டும் ஒருபோக பாசன நிலத்திற்கு 600 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 63.29 கன அடியாக உள்ளது.

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பில் இன்று காலை 10 மணியளவில் ரயில்வே பாலம் பணிகள் பார்வையிடல், NADP மையம் பார்வையிடல், பெரியகுளம் வேளாண்மை துறை சார்பில் வேளாண் இயற்கை இடுபொருள் மையம் பார்வையிடுதல், விவசாயிகளை சந்தித்தல், வீரபாண்டி திருக்கோவில் திருப்பணிகள் பார்வையிடல், சின்னமனூர் நகராட்சியில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் பார்வையிடல் முதலிய ஆய்வுகள் நடைபெற உள்ளது.

கேரள போலீசாரை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்தமிழக கேரள எல்லையான கம்பம் மெட்டு சோதனை சாவடியில் நேற்று (பிப்.18) கேரள போலீசார் தமிழக லாரி ஓட்டுனர் ஒருவரை தாக்கியதுடன் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து தமிழக லாரி ஓட்டுனர்கள் லாரி ஓட்டுநரை தாக்கியதை கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கம்பம் மெட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டத்தில் இன்று 18.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு(2024-2025) தேனி மாவட்டத்தில் நாளை (19.02.2025) குழுவின் தலைவர் காந்திராஜன் தலைமையில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற பேரவை செயலக அலுவலர்களுடன் வருகின்றனர். வேளாண், கால்நடை பராமரிப்பு, நெடுஞ்சாலை, சிறைச்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.02.2025 அன்று நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7695973923 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (பிப்.18) நீர்மட்டம்: வைகை அணை: 63.27 (71) அடி, வரத்து 160 க.அடி, திறப்பு 69 க.அடி, பெரியாறு அணை 17.25 (142) அடி, வரத்து 2 க.அடி, திறப்பு 400 க.அடி, மஞ்சளார் அணை 39.85 (57) அடி, வரத்து 20 க.அடி, திறப்பு 75 க.அடி, சோத்துப்பாறை அணை 88.23 (126.28) அடி, வரத்து 2 க.அடி, திறப்பு 25 க.அடி, சண்முகா நதி அணை 29 (52.55) அடி, வரத்து இல்லை, திறப்பு 14.47 க.அடி.

தேனி மாவட்டத்தில் இன்று 17.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

பெரியகுளம் வட்டம் வடுகபட்டியில் ஸ்ரீ மார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவன் நா.சித்தார்த் சென்னையில் நடைபெற்ற ப்ரைன்பாய் நடத்தும் 3வது தேசிய அளவிலான கணிதத் திறன் வளர்ப்புப் போட்டியில், 2ம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.இம்மாணவனுக்கு இன்று பள்ளி வளாகத்தில்,மாணவர்கள் முன்னிலையில் பள்ளி நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <
Sorry, no posts matched your criteria.