Theni

News September 26, 2024

தேனி: முன்னாள் மனைவியின் 3 வது கணவர் மூலம் தாக்குதல்

image

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ஜோதிபாசு. இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து தனது 10 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று முன்விரோதம் காரணமாக முன்னாள் மனைவியின் 3-வது கணவர் வேல்முருகனின் உறவினர்கள் ஜோதிபாசு மற்றும் அவரது 10 வயது மகளை கம்பால் அடித்து தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரில் 9 பேர் மீது கண்டமனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 26, 2024

97 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; பெண் கைது

image

க.விலக்கு அருகே பெருமாள் கோவில்பட்டியில் அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தனிப்பிரிவு போலீசார் க.விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். பிறகு எஸ்ஐ பிரபா தலைமையிலான போலீசார் ஜெயந்தி வீட்டில் சோதனை செய்ததில் ரூ.69,700 மதிப்புள்ள 97.245 கி.கி. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஜெயந்தியை கைது செய்து விசாரித்து வந்தனர்.

News September 25, 2024

தேனியில் தற்காலிக பணியிடம்; ஆட்சியர் அறிவிப்பு

image

தேனி மாவட்ட காலநிலை மாற்ற இயக்க அலகிற்கு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. எனவே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்ச்சி பெற்றிருப்பின் தங்களது சுய விவரங்களுடன் மாவட்ட வன அலுவலகத்தில்,நேரிலோ அஞ்சல் வழி மூலமாக விண்ணப்பிக்கலாம். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

தேனியில் 6-வது நாளாக வேலை நிறுத்தம்

image

தேனி மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் எம்.சாண்ட், ஜல்லி, எஸ்.சாண்ட் போன்ற கட்டுமானப் பொருள்களின் விலை யூனிட்டுக்கு ரூ.1000 வரையில் உயா்ந்தது. இதைக் கண்டித்து டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் கம்பம், கூடலூா், சின்னமனூா், ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டம் 6 ஆவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

News September 25, 2024

தேனியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

எரிவாய் நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும்பொருட்டு செப்.27 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவனம், எரிவாயு முகவர்கள், நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாய் நுகர்வோர்கள் கலந்து கொள்ள இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

ரூ.22.85 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது.

image

பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ஆனந்த ரூபனுக்கு, தேனி KRR நகர் குமார், திருச்சியைச் சேர்ந்த ஜேரோம், குரு ஈஸ்வர், பரணிதரன் ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.22 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு, மோசடி செய்ததாக ஆனந்த ரூபன் தேனி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். பிறகு போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்து ஜெரோமை சிறையில் அடைத்த நிலையில் நேற்று பரணிதரனையும் சிறையில் அடைத்தனர்.

News September 24, 2024

“சுருளி சாரல் திருவிழா-2024” சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு

image

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் திருவிழா-2024” வருகின்ற 28 முதல் அக்.02 வரை 5 நாட்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் விளையாட்டு போட்டிகள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் & நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

தேனியில் வருகின்ற 27ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி தீர்வு காணலாம் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

தேனி பாலியல் வழக்கில் திருப்பம்

image

தேனியை சேர்ந்த 22 வயது நர்சிங் கல்லூரி மாணவியை 7 நபர்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அந்த நர்சிங் கல்லூரி மாணவி கூறியது அனைத்தும் பொய்யான தகவல் என்றும், மன அழுத்தம் காரணமாக மாணவி அவ்வாறு கூறியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News September 24, 2024

தேனி: பணிக்கு வராத உதவியாளர் மீது கலெக்டர் நடவடிக்கை

image

ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செப்.18 அன்று கலெக்டர் ஆய்வு நடத்தினார். இதில் அங்கு பணிபுரியும் இளநிலை உதவியாளர் சரவணன் பணியில் இல்லாதது தெரியவந்தது. விசாரணையில், சரவணன் 14 நாட்களுக்கும் மேலாக உரிய தகவல் தெரிவிக்காமல், பணிக்கு வாராமல் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!