India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

போடியை சேர்ந்த வீரபத்திரன் என்பவர் தான் மற்றும் தனது உறவினர்கள் சிலரிடம் போடியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அவரது மனைவி சுதா ஆகியோர் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி மொத்தம் ரூ.32.4 லட்சம் மோசடி செய்ததாக தேனி எஸ்.பி சிவ பிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின் பெயரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தம்பதியர் மீது நேற்று (மார்.12) வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.

தேனி வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகில் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் உள்ளது. இங்கு டூவீலர் பழுது நீக்குதல் பயிற்சி மார்ச் 24 முதல் துவங்குகிறது. 18 வயது நிரம்பிய வேலை இல்லா ஆண்கள்,பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மதிய உணவு இலவசம். விவரங்களுக்கு.95003-14193 என்ற எண்ணில் அழைக்கலாம். தெரிந்த நண்பர்களுக்கு SHARE செய்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உதவுங்க.

தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள். கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை (வியாழன்) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு கடன் உதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று கோவை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது .தற்போதைய நிலவரப்படி தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள். கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை (வியாழன்) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு கடன் உதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தெரிவித்து உள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வெளியாகியுள்ளது .ஆண்டிப்பட்டி 4.8 மி.மீ, வீரபாண்டி 4.6 மி.மீ, பெரியகுளம் 12.0 மி.மீ, மஞ்சளாறு 7.0 மி.மீ, சோத்துப்பாறை 9.0 மி.மீ, வைகை அணை 8.2 மி.மீ, போடிநாயக்கனூர் 2.8 மி.மீ, உத்தமபாளையம் 5.6 மி.மீ, கூடலூர் 2.6 மி.மீ, பெரியாறு அணை 1.2 மி.மீ, தேக்கடி 11.8 மி.மீ, சண்முகா நதி 6.4 மி.மீ. சராசரி மழை அளவு -5.8 மி.மீ.

தமிழ்நாடு அரசு சார்பாக பொதுத்துறை அயல்நாடு வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அரேபியாவில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2025. தேனி மட்டுமில்லாமல் தமிழக முழுவதும் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விவரம் அறிய <

ஆண்டிபட்டி அருகே ஏத்தகோவில் மலை அடிவாரத்தில் ஒண்டிவீரன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவிலில் இருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து ஊர் பெரியவர்கள் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த மாயன் என்பவர் சிலையை தான் உடைத்ததாக கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் மாயனை (மார்ச்.11) நேற்று கைது செய்தனர்.

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற உள்ள மகளிர்களுக்கான இலவச தையல் பயிற்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முடிந்து 45 வயதிற்குள் உள்ள மகளிர்கள் சேர்ந்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் பெற இந்த 04546-251578, 9500314193 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.*ஷேர் செய்து பிறருக்கு உதவுங்கள்

தேனி நகர் பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(47) இவர் ஆட்டோ ஓட்டுநர். சமீபத்தில் இவரது தாய் முத்தம்மாள் இறந்தார். இதனால் தானும் சாகப்போகிறேன் எனக் கூறியபடி இருந்தவர் மார்ச்.6ம் தேதி மாலை தேனி பழைய பஸ்நிலையத்தில் விஷ மருந்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தமிழரசன் உயிரிழந்தார்
Sorry, no posts matched your criteria.