Theni

News October 13, 2024

சோத்துப்பாறை அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

image

பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கியது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 126.28 அடியாகும். தற்போது நீர்மட்டம் உயர்வால் 117.40 அடியாக ஆனாது. இந்த நீர்மட்டத்தால் விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியில் குடிநீர் தட்டுப்பாடுக்கு வழி இருக்காது என்று மகிழ்ச்சியடைந்தனர்.

News October 13, 2024

கால்நடை கணக்கெடுப்புக்கு நவீன செயலி அறிமுகம்

image

தேனியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், கால்நடைகள் கணக்கெடுப்பை துல்லியமாக நடத்த நவீன செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி நெட் ஒர்க் கிடைக்காத இடத்திலும் பயன்படுத்தலாம். இந்த செயலியை பாரத பிரதமர் அறிமுகம் செய்ய உள்ளார். அதன்பின் இந்தியா முழுவதும் இந்த செயலி மூலம் கால்நடைகள் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

News October 13, 2024

தேனி: இட்லிக்கடைக்குள் புகுந்த லாரி; ஒருவர் மரணம்

image

கம்பம் மெட்டிலிருந்து மரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று உத்தமபாளையம் வழியாகச்செல்லும் போது பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரமிருந்த இட்லி கடைக்குள் புகுந்தது. இதில் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கேரளத்தைச் சேர்ந்த மத்தீவ் மகன் தாமஸ் (56) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவரும் காயமடைந்தனர்

News October 12, 2024

தேனியில் புகார் எண் வெளியீடு

image

தேனி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் பாதிக்கப்படும் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்து மற்றும் தீருதவிகள் தொடர்பாக முறையிடுகளை 18602021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News October 12, 2024

பெரியகுளம் வட்டார பகுதி மழைப்பொழிவு விவரம்

image

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்த மழைப்பொழிவின் விபரம் பெரியகுளம் 43.0, சோத்துப்பாறை 32.0, மஞ்சுளாறு 26.0, வைகை அணை 21.8 சதவீத மழை பொழிவாகியுள்ளது. மேலும் தேனி, ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்சமாக 3.0 சதவீதமும், அதிகபட்சமாக 6.4 சதவீதமும் மலைப்பதிவாகியுள்ளது.

News October 12, 2024

தேனியில் குரூப் 2, 2ஏ தேர்விற்கான பயிற்சி வகுப்புகள்

image

அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்.14-ல் துவங்க உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, அல்லது 63792 – 68661 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

News October 11, 2024

கூடலூர் அருகே எரிந்த நிலையில் சடலம்; போலீசார் விசாரணை

image

தேனி மாவட்டம், கூடலூர் பைபாஸ் சாலையில் மந்தை வாய்க்கால் அருகில் எரிந்த நிலையில் ஓர் சடலம் இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News October 11, 2024

தேனியில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

image

தேனி மாவட்ட திறன் பயிற்சித் துறை சாா்பில் வருகிற அக்.14 தேனி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநர் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தொழில் பழகுநர் களை தோ்வு செய்ய உள்ளனா். முகாமில் அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் படித்து தோ்ச்சி பெற்றவா்களும், தோ்ச்சி பெறாதவர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 11, 2024

குடிக்க பணம் தர மறுத்ததால் ஒருவர் தற்கொலை

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அபிமன்யு. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி பணம் கேட்டு தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அக்.8 அன்று தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டு அவர் மறுத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது வீட்டில் அபிமன்யு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நேற்று (அக்.10) வழக்கு பதிவு செய்தனர்.

News October 11, 2024

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை முகாம்

image

தேனி, அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் அக்.14 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் 25 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 500க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளதால் பயன் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!