Thanjavur

News October 1, 2024

ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

image

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் இளைஞர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தார். தாரமங்கலத்தைச் சேர்ந்த அன்பழகன் தனது நண்பர் சேகர் உடன் உறவினர் வீட்டுத் துக்க நிகழ்வில் பங்கேற்றனர். இதற்கு பிறகு திருமலைராஜன் ஆற்றில் குளிக்க சென்றபோது, அன்பழகன் ஆற்றில் மூழ்கினார். பின்னர் தேடிய போது, அவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

News September 30, 2024

தஞ்சையில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசு வளர்ச்சி துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உடையவர்கள்‌ www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, வரும் 31.10.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

தஞ்சை மாவட்டத்தில் 540 மனுக்கள் பெறப்பட்டன

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 540 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News September 30, 2024

தஞ்சை வந்த 1,462 டன் உரம்‌

image

சம்பா சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் இருந்து சரக்கு ரயில் மூலமாக 1,462 டன் யூரியா, காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி சூப்பர் உரம் 21 பெட்டிகளில் தஞ்சாவூருக்கு நேற்று வந்து இறங்கியது. பின்னர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தனியார் விற்பனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News September 30, 2024

தஞ்சையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று திங்கட்கிழமை (செப்.30) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் பெற்றுக்கொண்டார். இதில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 30, 2024

பட்டுக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

தஞ்சாவூா் மாவட்டம், ராஜாமடம் பகுதியில் சனிக்கிழமை இரவு அழுது கொண்டிருந்த 17 வயது சிறுமியை அப்பகுதியினா் மீட்டு, அதிராம்பட்டினம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், முத்துப்பேட்டையை சேர்ந்த சிறுமி மன்னார்குடிக்கு சென்ற போது முத்துப்பாண்டியன், தவசீலன் ஆகியோர் கடத்தி வந்து, ராஜாமடம் அக்னிஆறு பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

News September 29, 2024

அமைச்சராக பொறுப்பேற்ற கோவி.செழியன்

image

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசின் தலைமை கொறடாவாக பதவி வகித்த கோவி.செழியன் சென்னை ராஜ் பவனில் இன்று (செப்.29) பிற்பகல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் கோவி.செழியனுக்கு உயர்கல்வி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News September 29, 2024

தஞ்சை: சிறுமி பாலியல் வான்கொடுமை குறித்து 2 பேரிடம் விசாரணை

image

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை மன்னார்குடியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் மன்னார்குடியை சேர்ந்த முத்துப்பாண்டியன் (28), தவசீலன் (27) ஆகிய‌ இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 29, 2024

திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. அமைச்சராகிறார்

image

தமிழ்நாடு அமைச்சரவை நேற்று இரவு மாற்றும் செய்யப்பட்டது. மேலும் அமைச்சரவையில் திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. கோவி.செழியன் இடம் பெறுகிறார். இவர் தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாகவும் பதவி வகித்து வந்தார். மேலும் இன்று மாலை 3.30 மணியளவில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்துக்கள் COMMENTஇல் பதிவிடவும்.

News September 28, 2024

கும்பகோணத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது

image

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 5ந் தேதி அன்று, மனவளர்ச்சி குன்றிய பெண்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்ட கணபதி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!