India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சையை அடுத்த மாப்பிள்ளைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் 52 வயதான கூலி தொழிலாளி. இவர் தஞ்சை விமானப்படை நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தார். இதையடுத்து அவரது குடுபத்தினரின் ஒப்புதலோடு தொழிலாளியின் 2 கிட்னி, தோல், கல்லீரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. பின்னர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அவர் கூறியதாவது: வட்டம் மற்றும் ஊராட்சி அளவுகளில் அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய்த்துறையினர் ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கூட்டம் நடத்தி மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் 1098 என்ற எண்ணை அழைத்து மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிதாக மீன் குளங்கள் அமைக்கவும் 40% மானியம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் தஞ்சையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் குழந்தைகள் மீது நடைபெறும் வன்முறைகள், பாலியல் குற்றங்கள் குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.
தஞ்சை அருகே பாப்பாநாட்டில் கடந்த இரு வாரங்களுக்கு முன் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே கவிதாசன், திவாகர், பிரவீன், சிறுவன் என 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பாலியல் வழக்கில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவிடைமருதூர் வட்டம், திட்டச்சேரி கீழத்தெருவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன் குடிநீர் கலந்ததே இதற்கு காரணம் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
பாபநாசம் தாலுக்கா, திருக்கருக்காவூர் பெருமாள்கோயில் தெருவில் வசித்து வரும் பாலாஜி மகன் தர்ஷன்(12) ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் திருக்கருக்காவூரில் அமைந்துள்ள வெட்டாற்றில் இன்று குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாபநாசம் தாலுக்கா, திருக்கருக்காவூர் பெருமாள்கோயில் தெருவில் வசித்து வரும் பாலாஜி மகன் தர்ஷன்(12) ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் திருக்கருக்காவூரில் அமைந்துள்ள வெட்டாற்றில் இன்று குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவதுபோல், சுவாமிமலையில் ஞானத்தமிழ் முருகன் மாநாடு நடத்த வேண்டும் என்று திருவடிக்குடில் இறைப்பணி கூடம் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்தர்கள் சார்பில் திருவடிக்குடில் சுவாமிகள், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். பழனியில் 2 நாட்கள் நடைபெறுவது போல் சுவாமி மலையில் 6 நாட்கள் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் ஆா்.பொன்முடி நேற்று தெரிவித்துள்ளாா். அதன்படி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பா் 9 வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய பகுதிகளிலிருந்து இரவு பகலாக இயக்கப்பட உள்ளன. இதனை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார். SHAREIT
Sorry, no posts matched your criteria.