Thanjavur

News September 1, 2024

திருவையாறு பகுதியில் திடீர் தடை

image

திருவையாறு பகுதியில் செல்போன் டவர் இருந்தும் பிஎஸ்என்எல் மொபைல் நெட்வொர்க் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி. இந்த நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News September 1, 2024

திருப்பனந்தாளில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

image

தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் மே ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.இராமவிங்கம் மற்றும் தமிழக அரசின் தலைமை கொறடா கோ.செழியன்ஒன்றிய அவைத்தலைவர் புகழேந்தி தலைமையில் திருப்பனந்தாள் கலைஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் மிசா.மனோகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 1, 2024

குடந்தையில் தீ விபத்துக்குள்ளான மூன்று குடும்பங்களுக்கு உதவி

image

கும்பகோணம் மாநகராட்சி, 2 வது வார்டு, யானையடி, அறிவொளி நகரில் வசித்து வரும் இளங்கோவன் ராஜாங்கம், கோமளவள்ளி பால்ராஜ் மற்றும் குமார் சுந்தர்ராஜ் ஆகியோரது மூன்று குடிசை வீடுகள், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மிகவும் சேதமடைந்தன. தகவல் அறிந்த, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து உதவினார்.

News September 1, 2024

பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர் ‘நீட்’ தெரிவில் தேர்ச்சி

image

பட்டுக்கோட்டை வட்டம், கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்த குமாா்-அன்னக்கிளி தம்பதி மகன் கு.ஆகாஷ்(19). அனந்தகோபாலபுரம் அரசுப் பள்ளியில் பயின்றுள்ளார். நிகழாண்டில் நடைபெற்ற நீட் தோ்வு எழுதிய ஆகாஷ், 524 மதிப்பெண்களை பெற்றாா். இவா் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், கோவை கற்பகம் மருத்துவ கல்லூரியில் பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது. மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News September 1, 2024

தஞ்சையில் 316 பேருக்கு பணி ஆணை

image

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 72 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன். மேலும் 1,452 பேர் இளைஞர் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றனர். இதில் 316 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

தஞ்சை மக்களிடம் நன்றி கூறிய எம்பி

image

தஞ்சை தொகுதி கீழவாசல் பகுதி மற்றும் மருத்துவக் கல்லூரி பகுதிகளில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ச.முரசொலி எம்பி மக்களை சந்தித்து நன்றி கூறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சை எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் கலந்து கொண்டனர்.

News August 31, 2024

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் முகாம்

image

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் சந்திரசேகரன் இன்று தொடங்கி வைத்தனர். உடன் பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், தஞ்சை மாநகரச் செயலாளர் மேயர், துணை மேயர், மாவட்ட ஆட்சியர் உள்ளனர்.

News August 31, 2024

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வேளாங்கன்னி திருவிழா மற்றும் விடுமுறை நாள்களில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.  கூட்ட நெரிசலை தவிா்த்து எவ்வித சிரமம் இன்றி பயணிக்க டிஎன்எஸ்டி மொபைல் செயலி மூலம் முன் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளாா்.

News August 31, 2024

தஞ்சை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

image

தஞ்சை செக்கடி பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற 2 பேரை போலீசார் விசாரித்ததில், அரிவாளை காண்பித்து கஞ்சா விற்றது தெரியவந்தது. பின்னர், அஜித், செல்லையா ஆகியோரை கைது செய்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News August 31, 2024

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில், உள்ள பொன்நகர் வாரி பகுதியில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை, கண்ட ஒரு தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் அய்யாவு தலைமையிலான போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? எந்த ஊர், தற்கொலையா, கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!