Thanjavur

News September 2, 2024

இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டம்

image

மருத்துவகல்லூரி சாலையில் கடந்த 9ஆம் தேதி ஸ்ரீராம் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஜீவா, தனுஷ், ஷாம் சுரேஷ், ஆரோக்கிய டேனியல் ராஜ், ஹரிசங்கர் ஆகிய ஐந்து பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

News September 2, 2024

தஞ்சையில் இருந்து 2,500 டன் அரிசி அனுப்பி வைப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் தலா 1,250 டன் வீதம் 21 ரயில் பெட்டிகளில் விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்குவதற்காக அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

News September 2, 2024

தஞ்சையில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

image

தஞ்சை வெண்ணாற்றங்கரை சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (40). கூலி தொழிலாளியான இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து அவர் நேற்று யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தஞ்சை மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 2, 2024

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது: அமைச்சர்

image

மாநில அரசுகளின் தேவைகளை உணர்ந்து தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத காரணத்தினால் மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்தார்.

News September 2, 2024

கும்பகோணம்: தவறவிட்ட தங்கக்காசுகள் ஒப்படைப்பு

image

புதுச்சேரியை சோ்ந்தவா் கலைமணி. கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர் கும்பகோணத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டாா். அப்போது, கையில் வைத்திருந்த பையை மறந்து அங்கேயே வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த பையை கவனித்த பெண் தொழிலாளி, அதனை திறந்து பார்த்தபோது அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கக்காசுகள், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இருந்துள்ளன. பின்னர் அவர் நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கவே மோகனிடம் பை ஒப்படைக்கப்பட்டது.

News September 2, 2024

திருவிடைமருதூரில் பரிசு வழங்கிய அமைச்சர்

image

திருவிடைமருதூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பூப்பந்தாட்டப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 28 ஆண்கள் அணியும், 25 பெண்கள் அணியும் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசை விருதுநகரைச் சேர்ந்த ஆண்கள் அணியும், இரண்டாம் பரிசை சிவகங்கை சேர்ந்த பெண்கள் அணியும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

News September 2, 2024

செங்கிப்பட்டியில் உள்ள 16 ஏரிகளுக்கு நீர் திறக்கப்படுமா

image

வாழவந்தான் கோட்டை ஏரி நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கும் நிலையில், 16 ஏரிகள் உய்யக் கொண்டான் நீடிப்பு வாய்க்கால் மூலம் பயன் பெற்று வரும் நிலையில், ஏரி நீர் திறக்கப்படுமா என்றும், ஏற்கனவே சுற்று வட்டார பகுதியில் நீரின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நிலையில், ஆடு மாடுகள் கூட நீரின்றி சிரமப்பட்டு வருகிறது. எனவே தண்ணீர் திறக்கப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

News September 2, 2024

கும்பகோணம் பகவத் விநாயகருக்கு பண அலங்கார வழிபாடு

image

கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் மடத்து தெருவில் அருள்பாலித்து வரும் பகவத் விநாயகர் கோயில், காசி விஸ்வநாதர் கோயிலின் இணை கோயிலாக திகழ்ந்து வருகிறது. பிரசித்தி பெற்ற கோயில் காசியை விட அதிக புண்ணியம் கொண்டதாக திகழ்கிறது. இங்கு பகவத் விநாயகர் நவக்கிரகங்கள் குடி கொண்டுள்ளனர். இதனையடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களை கொண்டு கரன்சி அலங்காரம் செய்து வழிபட்டனர்.

News September 1, 2024

தஞ்சையில் நேருக்கு நேர் மோதி விபத்து: 2பேர் உயிரிழப்பு

image

தஞ்சையை சேர்ந்த அருண்குமார் தனது மனைவியின் வளைகாப்பு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக நண்பர் சாரோன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதேபோல் பள்ளத்தூரை சேர்ந்த அரவிந்தன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பட்டுக்கோட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாரோன் மற்றும் அரவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News September 1, 2024

தேசிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் சிவசங்கர் பேச்சு

image

திருவிடைமருதூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. அப்போது ஒன்றிய அரசு நிதி வழங்காததை ஏற்கனவே முதலமைச்சர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரை சந்தித்தனர். மீண்டும் அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வற்புறுத்துவது மாநில உரிமைகளுக்கு எதிரானது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

error: Content is protected !!