India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மாவட்டத்தில் இன்று 85 தேர்வு மையங்களில் குரூப்2 தேர்வு நடைபெற்றது. இதில் 24,784 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 18,544 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 6,240 பேர் தேர்வு எழுதவில்லை. அதிகபட்சமாக தஞ்சையில் 3,127 பேர் தேர்வு எழுதவில்லை. இதன் மூலம் தேர்வு எழுதியவர்கள் 74.82%, தேர்வு எழுதாதவர்கள் விகிதம் 25.17% சதவீதமாக உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள் அத்துடன் இயங்கும் மதுபானக்கூடங்கள் மற்றும் FL2, FL3, FL3A, FL3AA உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் வரும் 17-ஆம் தேதி மிலாடி நபி தினத்தன்று மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்று தமிழகம் முழுவதும் குரூப் – 2 தேர்வு நடைபெறுகிறது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் இந்த தேர்வில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் என மாவட்டம் முழுவதும் 85 மையங்களில் 24,840 தேர்வாளர்கள் தேர்வு எழுதுகின்றனர் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க விரும்புவோர் கடை அமைந்துள்ள கட்டடத்தின் வரைபடம், சட்டபூர்வ உரிமைக்கான ஆவணங்கள், முகவரி சான்று, அரசு கணக்கில் 500 செலுத்தியதற்கான ரசீது உள்ளிட்ட தகுந்த ஆவணங்களுடன் வரும் 30ஆம் தேதிக்குள் http://tnedistrict.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு தனியார் சிறு – குறு நிறுவனங்கள் பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட காலி பணி இடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே வேலை தேடும் இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். SHAREIT
ஒரத்தநாடு அடுத்த பாப்பாநாடு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் பிரவீன் என்பவர் மீது, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுதா தாக்கல் செய்யப்பட்ட ஆணை உறுதி ஆவணத்தின் அடிப்படையில், இவரை திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வலையப்பட்டி ஊராட்சி அருகே தஞ்சாவூர்- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை இன்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். என் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கும்பகோணம்-விக்கிரவாண்டி நெடுஞ்சாலை ஆய்வு பணிகளுக்காக இன்று காலை 10.35 மணியளவில் கும்பகோணத்துக்கு வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வரவேற்றார். இந்நிகழ்வில் எம்.பி-க்கள் சுதா, கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விளார்புதுப்பட்டினம் தில்லைநகரை சேர்ந்த மனோஜ்குமார். கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு, தஞ்சாவூர் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்து நீதிபதி சத்யதாரா, வெடிகோபி, பிரசாந்த் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
தஞ்சையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், கணவரை இழந்த பெண்கள் ஆகியவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் சுயதொழில் தொடங்கிட ஒரு பயனாளிகளுக்கு 50,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.