Thanjavur

News October 4, 2024

விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்களுக்கு அபராதம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் மீது தொழிலாளர் ஆணயரகம் அபராதம் விதித்தது . தஞ்சாவூர் மாவட்டத்தில் 164 கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளர் துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். இதில், 102 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

News October 3, 2024

கும்பகோணத்தில் தாஜ்மஹால் பொருட்காட்சி

image

கும்பகோணம் தாலுகா சென்னை சாலை செட்டி மண்டபத்தில் தாஜ்மஹால் பொருட்காட்சி மிக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் ஏராளமானமானோர் கண்டுகளிக்க ஏதுவாக செப்.19 முதல் மாலை 4 மணி – இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது. கும்பகோணம் தாலுகா காவல் நிலையம் அனுமதியுடன் பொதுமக்கள் பார்வைக்காக தாஜ்மஹாலை சிறந்த முறையில் வடிவமைத்துள்ளனர்.

News October 3, 2024

நீரில் மூழ்கும் ஆபத்துள்ள இடங்களில் இறங்க வேண்டாம் – கலெக்டர் உத்தரவு

image

கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சை மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களில் முழு கொள்ளளவு நீர் நிரம்பி செல்வதால் நீரின் வேகம் அதிகமாக உள்ளது. தூர்வாரப்பட்டு ஆழமாக உள்ளதால் குளிக்கவும் மற்றும் பிற காரணங்களுக்காக ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களுக்கு செல்பவர்கள் கவனமாகவும், முன் எச்சரிக்கையுடனும் குளிக்க வேண்டும்.

News October 3, 2024

தஞ்சையில் ஒரே நாளில் சிக்கிய ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள்

image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் விதமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் போலீசாரால் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் மதுபானம் விற்பனை செய்த 49 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 40 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2394 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்ததாக எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

News October 2, 2024

தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வழக்கு

image

தஞ்சை பெருவுடையார் கோவிலில் 40 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள இந்திரன் சன்னிதியை திறக்க கோரி, கோவில்பட்டி சின்ராஜ் பொதுநல மனு தாக்கல் செய்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவிப்பு அனுப்பி, வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. கோவில் தரப்பில் சிலைகள் சேதமடைந்ததால், 2008ல் அனுமதி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

News October 2, 2024

43.13 கோடி பயிர் காப்பீடு – கலெக்டர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாகுபடி செய்யாத தஞ்சாவூர், பூதலூர் உள்ளிட்ட 45 கிராமங்களுக்கு முதற்கட்டமாக 22.44 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டது. தொடர்ந்து மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்ட 175 கிராமங்களை 20.69 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டது. கடந்த 2023 – 2024 ஆம் ஆண்டில் மட்டுமே 43.12 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 2, 2024

அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

image

தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கமல்ஹாசன் (34) என்பவர், தனது அண்ணன் மனோகரனை (43) கட்டையால் தாக்கி கொலை செய்தார். மது அருந்தியபோது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது. மனோகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, காவல்துறை கமல்ஹாசனை கைது செய்தனர்.

News October 2, 2024

திருநறையூர் வந்த நடிகர் ஸ்ரீமன்

image

திருவிடைமருதூர் அருகே திருநறையூர் ராமநாதசுவாமி கோயிலில் சனி பகவான் குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த கோயிலுக்கு நடிகர் ஸ்ரீமன் தனது மனைவியுடன் நேற்று வருகை தந்து சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தார். கோயில் அர்ச்சகர் ஞானசேகர் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீமனுக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது, அவரை காண பொதுமக்கள் கூடினர்.

News October 1, 2024

மானியத்துடன் கடன் வசதி – ஆட்சியர் தகவல்

image

தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாய விளைநிலங்கள் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்கப்படுகிறது. தகுதியுடையவர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணபிக்கலாம்.

News October 1, 2024

உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023 – 2024 ஆண்டிற்கு ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் 4,800 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நன்கு உலர வைக்கப்பட்ட 12% ஈரப்பதம் கொண்ட உளுந்து கிலோ 74 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். 25.09.2024 (மு) 23.12.2024 வரை 90 நாட்கள் வரை உளுந்து கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!