Thanjavur

News November 6, 2024

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்.

image

தமிழ்நாடு மின் உற்பத்தி (ம) பகிர்மான கழக தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை மின் பகிர்மான வட்டத்தில் நவம்பர் மாத நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை (நவ.7) செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் வல்லம், கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News November 6, 2024

தஞ்சாவூர்: 1,15,424 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் என மாவட்டம் முழுவதும் 231 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 424 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 23,231 விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் 273 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 6, 2024

சம்பா தாளடி பயிர் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள் 

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் நடப்பு சம்பா – தாளடி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய இரண்டு காப்பீடு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 548 ரூபாய் பிரிமியம் செலுத்தி, அதிகபட்சமாக 36,500 க்கு காப்பீடு செய்து கொள்ளலாம். சம்பா – தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ஆம் தேதி கடைசி நாள் என அவர் தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

பட்டுக்கோட்டை அருகே ஆண் சிசு கண்டெடுப்பு

image

பட்டுக்கோட்டை அருகே உள்ள சேதுபாவசத்திரம் காவல் நிலையத்தில் ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகில் குணபாலன் என்பவரின் தென்னந்தோப்பில் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்த நிலையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேதுபாவசத்திரம் காவலர்கள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2024

21 தனியார் பேருந்துகளுக்கு ரூ.47,000 அபராதம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூல் செய்த தனியார் பேருந்துகள் மற்றும் வரி செலுத்தாத தனியார் பேருந்துகள் குறித்து தஞ்சை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் விதிகளை மீறி செயல்பட்டதாக 21 தனியார் பேருந்துகளுக்கு 47,000 ரூபாய் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

News November 5, 2024

உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் குடும்ப அட்டை, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, பட்டா, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 392 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News November 5, 2024

தஞ்சை ஆட்சியரிடம் குவிந்த மனுக்கள்

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 392 மனுக்கள், இலவச வீட்டு மனை, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை மற்றும் பட்டா மாற்றம் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். ரமேஷ் ராஜேந்திரனின் வாரிசுகளுக்கு ரூ. 39,51,233-க்கு காசோலை வழங்கப்பட்டது.

News November 5, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்தடை

image

கும்பகோணம் அருகே முள்ளுக்குடி மற்றும் குறிச்சி பகுதிகளில் நவம்பர் 7-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர். மாதாந்திர  பராமரிப்பு பணிகள் காரணமாக குறிச்சி, முள்ளங்குடி, கயலூர், திருக்கோடிகாவல், பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News November 5, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தஞ்சாவூரில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். இதே போல் இந்த மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை குறித்து மனு அளிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். SHAREIT

News November 4, 2024

தஞ்சையில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். இதே போல் இந்த மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை குறித்து ஆட்சியரிடம் ‌ கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

error: Content is protected !!