India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் புதன் கிழமை மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை நவ.13 பூதலூர் வட்டம் வீரமரசன்பேட்டை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்துவதற்கு தஞ்சை மாவட்ட ஆட்சி பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை பொது ஏலத்தில் விட ,மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். பொது ஏலமானது வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கோர்ட் சாலை பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறையின் சார்பில், கும்பகோணம் ஶ்ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறு தானிய உணவு கண்காட்சி நேற்று நடைபெற்றது. இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் துணை மேயர் சுப .தமிழழகன் கலந்து கொண்டு துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் 2311 வாக்குசாவடிகள் அமையப்பெற்றுள்ள மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய ஏதுவாக தேர்தல் சிறப்பு முகாம்கள் எதிர்வரும் 16ந்தேதி,17ந்தேதி,23ந்தேதி, மற்றும் 24ந்தேதி,ஆகிய நான்கு நாட்கள் காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாவட்டஆட்சியர் வேண்டுகோள்
கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பெருமாண்டி பூண்டியாயி கோவில், கும்பகோணம் சாத்தார தெரு மற்றும் கும்பேஸ்வரன் கோவில் பின்புறம் நடந்த மூன்று கொள்ளை சம்பவத்தில் சரவணகுமார் மற்றும் தீனேஷ் மீது வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்று சரவணகுமார் மற்றும் தீனேஷ் ஆகியோருக்கு தலா ஒன்பது ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராத தொகையும் விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணி நடைபெற்றும் வரும் நிலையில் குஜராத் மாநிலத்திலிருந்து இருந்து சரக்கு ரயிலில் 42 வேகன்களில் யூரியா உரம் தஞ்சை வந்தது. இந்த உரங்கள் தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை பொது ஏலத்தில் விட, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிடப்பட்டுள்ளது. பொது ஏலமானது, வருகின்ற 20ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் கோர்ட் சாலை, பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. SHARE NOW!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வி கடன், குடும்ப அட்டை, பட்டா, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 450 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.
தஞ்சை மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர்கள் சரத்குமார்(34) – மோகனசுந்தரி (27) தம்பதி. இவர்களுக்கு 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. சரத்குமார் நேற்று குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மோகனசுந்தரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த சரத்குமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று 11.11.2024 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர். பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.