Thanjavur

News November 18, 2024

71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாநகராட்சி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நாளை‌ (19.11.2024) மாலை நடைபெறுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சித் தலைவர் ப்ரியங்கா பங்கஜம், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் குட்கா கடத்தல் – 6 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக லாரியில் கொண்டுவரப்பட்ட ஒரு டன் குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட சிராஜுதீன், அப்துல் வஹாப், அப்துல் ரஹீம், ரசீது, ஷர்புதீன், ராஜா பக்ருதீன் ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குட்கா மற்றும் லாரி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News November 18, 2024

தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று 18.11.2024 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். SHARE NOW.

News November 18, 2024

தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

image

தஞ்சாவூா் கீழவீதி, பழைய அரண்மனை வளாகத்திலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கலை பண்பாட்டுத் துறை, மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நவ.23ஆம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது. விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

News November 17, 2024

தஞ்சை அருகே கொள்ளை திட்டம் முறியடிப்பு

image

மருவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடுககுடி முனியாண்டார் கோயில் பகுதியில் அடையாளம் தெரியாத ஏழு நபர்கள் ஆச்சனூர் பகுதியில் உள்ள நகைக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவையாறு வடுக்குடியை சேர்ந்த தினேஷ், ஆந்திராவை சேர்ந்த விக்கி, வீரமுத்து, மந்திரமூர்த்தி, அழகர், ராஜா, பழனிவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News November 17, 2024

திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர் பணி நீக்கம்

image

கடந்த 2023 ஆம் ஆண்டு அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர் வினோத் என்பவர் அதே பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் காவலர் வினோத் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை பணி நீக்கம் செய்து தஞ்சை மாவட்ட எஸ்பி.ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.

News November 17, 2024

4 துணை தாசில்தார்கள் இடமாற்றம் – ஆட்சியர் உத்தரவு.

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாபநாசம் துணை தாசில்தார் பிருந்தா, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட துணை தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலக கலைஞர் உரிமைத்தொகை திட்ட துணை இயக்குனர் சத்யராஜ் பாபநாசம் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் நான்கு துணைத் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News November 17, 2024

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு.

image

பாப்பாநாடு அருகே உள்ள திப்பியகுடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பட்டு (65). இன்று காலை அவருக்கு சொந்தமான வயலில் வேலை செய்வதற்காக சென்றபோது விஷ பாம்பு கடித்ததுள்ளது. இதனையடுத்து அவரை மீட்டு அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

News November 16, 2024

கும்பகோணம்: தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

image

கும்பகோணத்தில் கடந்த 13ஆம் தேதி கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடித்துள்ளதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணிக்கம் (ம) கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News November 16, 2024

தஞ்சை 1777 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் 

image

ஊட்டச்சத்தை உறுதி செய் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,777 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் நேற்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!