Thanjavur

News November 25, 2024

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நாளை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News November 25, 2024

பதிவாளர் நியமனம் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

தமிழ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நான்கு பிரதிகளுடன் வரும் 10.12.2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி மற்றும் அனுபவ தகுதி குறித்து பல்கலைக்கழகத்தின் இணையத்தில் தெரிந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2024

இளந்தளிர் குழந்தைகள் திருவிழா – குழந்தைகள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

image

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் (ம) கலைஆயம் சார்பில் இளந்தளிர் குழந்தைகள் திருவிழாவை முன்னிட்டு 29ஆம் தேதி செவ்வியல் குரலிசை, பரதநாட்டியம், 30 ஆம் தேதி நாட்டுப்புறப் பாடல், நாட்டுப்புற நடனம் (தனி மற்றும் குழு) மற்றும் 01ஆம் தேதி அன்று நாடகப் போட்டிகள் என‌ நடைபெறுகிறது. பங்கேற்க விரும்பும் குழந்தைகள் https://thanjavurtourism.org/ilanthalir2024/ இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

News November 25, 2024

 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

நாளை நவம்பர் 25 தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மற்றும் தேவையான பொருட்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.

News November 25, 2024

பாலியல் தொல்லை வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்

image

பூதலூர் அடுத்த குணமங்கலம், நடுத்தெருவை சேர்ந்த வினோத்குமார். இவர் தஞ்சையை சார்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரை தொடர்ந்து பூதலூர் போலீசார் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி வினோத்குமார் குண்டர் சட்டத்தில், கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். 

News November 24, 2024

தான் படித்த பள்ளிக்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பிரமணியன் தான் படித்த திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். தான் தங்கிப் படித்த கல்யாணி மாணவர் விடுதி, நான் படித்த வகுப்பறை ஆகியவற்றை பார்வையிட்டு மாணவப் பருவத்தை நினைவு கூர்ந்தார். பள்ளி நுழைவாயிலில் சிவசாமி ஐயர், நாராயணசாமி ஆகியோர் சிலைகளுக்கு புகழஞ்சலி செலுத்தினார். பள்ளி தலைமையாசிரியர் அவரை வரவேற்றார் வரவேற்றார்.

News November 24, 2024

கபிஸ்தலம் தலைமை காவலருக்கு கட்டாய ஒய்வு: எஸ்.பி அதிரடி

image

சதீஷ்குமார் என்பவர் பேராவூரணி காவல்நிலையத்தில் கடந்த 2023ஆண்டு காவலராக இருந்த போது, நடைபெற்ற உதவிஆய்வாளர் தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் கட்டாய ஓய்வு அளித்துள்ளார்.
சதீஷ்குமார் தற்போது கபிஸ்தலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2024

தஞ்சையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

image

தஞ்சாவூர் மாநகர் பகுதியில் காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். சைபர் கிரைம் உதவி உடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், மருத்துவகல்லூரி மருத்துவமனை பகுதியில் தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்ககளை துரிதமாக மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

News November 23, 2024

தரச் சான்றிதழ் பெறுவதற்கு மானியம் – ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறு – குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் முதல் முறையாக தரச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது தமிழக அரசால் 25% அதிகபட்சமாக 1 லட்சம் வரை மானிய வழங்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையத்தை அணுகி சிறு – குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

News November 22, 2024

தமிழ்க்கூடல் -2024 மாநாடு

image

அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இணைந்து நடத்தும் தமிழ்க்கூடல் -2024 மாநாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் கரிகால்சோழன் கலையரங்கத்தில் நாளை (நவ – 23)  நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!