India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட எஸ்.பி ஆசிஷ் ராவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சில இடங்களில் தண்ணீர் வீடுகளில் தேங்கி உள்ளது என்றும், அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று சிலர் தவறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இதுபோன்று தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வயிற்று வலி காரணமாக 9 ஆம் வகுப்பு மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. விசாரணையில் அதே பகுதியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை காதலிப்பதாகவும், குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து 10 ஆம் வகுப்பு மாணவனான போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஒரத்தநாட்டில் அதிகபட்சமாக நேற்று 24.50 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 20 மி.மீ, தஞ்சையில் 16.5 மி.மீ, வல்லம் பகுதியில் 8 மி.மீ, குருங்குளத்தில் 15.80 மி.மீ, திருவையாறில் 10 மி.மீ, பூதலூரில் 12.40 மி.மீ, திருக்காட்டுபள்ளியில் 7.60 மி.மீ, கல்லணையில் 10 மி.மீ, கும்பகோணத்தில் 5.80 மி.மீ, பாநாசத்தில் 10.00 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
கனமழை காரணமாக தஞ்சாவூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக புதன்கிழமை (27.11.2024) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுட்டுள்ளார். ஏற்கனவே நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 29ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே விவசாயிகள் கலந்து கொண்டது தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பருவமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க 9345088997 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (26.11.2024) தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதையொட்டி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். ஷேர் செய்யவும்
பட்டுக்கோட்டை வட்டார சேவை மையத்தில் நாளை (நவ-26) நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் மற்றும் தனி அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அடங்கிய 580 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.