India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட தாட்கோ சார்பில் கறவைமாடு வாங்குவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பயனாளிகளுக்கு வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர்தியாகராஜன், உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் வரும் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஒரு வார காலம் நடக்கவுள்ளது. ஒட்டுவில்லைகள் ஒட்டியும் துண்டறிக்கைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது தொடர்பான அரசாணை வழங்கியும் கொண்டாடப்படும். என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றி தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1,250 டன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு, பொது விநியோகத் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரண்டு வாரத்திற்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல், சளியுடன் ரத்தம் வருதல், பசியின்மை, எடை குறைதல், மார்பு விலாவில் வலி ஆகிய அறிகுறிகள் இருந்தால் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தஞ்சை பாலாஜி நகரை சேர்ந்த உறுதிமொழி (36) மற்றும் அவரது நண்பர் கணேசன் (47), இருவரும் ஆர்டிஓ அலுவலகம் அருகே தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உறுதிமொழி உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் கணேசன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சை மாவட்டம் குருங்குளம் அருகே தோழகிரிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் தனபால் (50). நேற்று காலை அருகில் உள்ள வயலில் மேய்ச்சலுக்காக விட்டார். மாலை வீடு திரும்பிய நிலையில், ஆடுகள் மற்றும் கன்றுகுட்டி திடீரென சுருண்டு விழுந்து இறந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதேபோன்று 12 ஆடுகளும் சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள மடத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் (55). கூலி தொழிலாளியான வீரையன் இன்று காலை தனது வீட்டின் பின்புறம் கொல்லை பகுதிக்குச் சென்றபோது அங்கு உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் மின்கம்பியை அவர் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வீரையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூரில் சுற்றுலா மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ. 25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது என மக்களவை உறுப்பினர் ச. முரசொலி தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஏற்கெனவே உள்ளேயும், வெளியேயும் பயன்பாடின்றி உள்ள கழிப்பறைகள் மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளன. தவிர, வெளியே புதிதாக கழிப்பறை கட்டப்படவுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, செய்யப்படவுள்ளன.
அய்யம்பேட்டை கடை வீதியில் உள்ள தஞ்சை – கும்பகோணம் சாலையில் மினி பஸ் டிரைவர் மர்ம நபர்களால் இன்று மாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிப்படைந்த விழுப்புரம் மாவட்ட மக்களுக்காக பேரூராட்சிகள் துறை சார்பில் ரூ.22 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் நேற்று (06.12.2024) கனரக வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.