India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, 24ந் தேதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், 26 ந் தேதி 10.30 மணிக்கு பேச்சுப்போட்டியும், 28ந் தேதி வினாடி வினா போட்டியும் தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் மைய நூலகத்தில் நேரிலோ (அ) தொலைபேசி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
அய்யம்பேட்டையை சேர்ந்த சிற்றுந்து ஓட்டுநர் சிவ மணிகண்டன் என்பவரை, சுந்தரேசன் என்பவர் 7ஆம் தேதி தனது நண்பர்களுடன் கொலை செய்தார்.பின்னர் சுந்தரேசன் உட்பட 3 பேர் போலீசில் சரணடைந்தனர். மேலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படவில்லை என போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 6ஆம் தேதி சுந்தரேசன் மீது சிவ மணிகண்டன் அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2019-ம் ஆண்டு ஜூன் வரையிலான பருவங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் தஞ்சை அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. சான்றிதழ்கள் வாங்காத மாணவர்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் மூன்று மாதம் (28/2/24) வரை அவகாசம் வழங்கியுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை-தமிழகம் நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு டிச. 11, 12, 13 மற்றும் 16-ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை உடனே ஷேர் செய்யவும்!
கோனேரிராஜபுரம் மேல தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி. ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆடுகளை கொட்டகையில் கட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீடு வந்து பார்த்தபோது ஏழு ஆடுகளையும் வெறிநாய் கடித்துள்ளது. இதில் காயமடைந்த ஏழு ஆடுகளும் சம்பவ இடத்திலே உயிரிழந்து கிடந்துள்ளது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை அனைவரும் ஏற்றார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆஷிஷ் ராவத், கும்பகோணம் சார் ஆட்சியர் செல்வி.ஹிருத்யா எஸ்.விஜயன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.எஸ்.சரவணன மற்றும் பலர் உடன் உள்ளனர்.
திருவோணத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வெட்டுவாக்கோட்டையில் காவல்துறையினர் வாகனசோதனை ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவையும் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர். ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் உள்ள குடோனில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக தஞ்சை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சோதனை செய்தனர். அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
துறையூர், ஈச்சங்கோட்டை, மின்னகர், வல்லம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (டிச.11) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், ஈச்சன்கோட்டை, துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 615 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
Sorry, no posts matched your criteria.