Thanjavur

News December 17, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம்

image

தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத்தேடி உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கள ஆய்வு 18.12.2024 புதன்கிழமை மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் பழைய பேருந்து நிலையம் அருகில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்

News December 17, 2024

கும்பகோணத்தில் நூதன மோசடி – இளைஞர் கைது

image

கும்பகோணம், வெங்கடேஸ்வரா தெருவை சேர்ந்த தனராஜ் – உஷா தம்பதி. இந்நிலையில் கடந்த நவ.12ஆம் தேதி உஷா வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள், மாநகராட்சி ஊழியர்கள் எனக்கூறி தங்க நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரபத்திரன் என்ற இளைஞரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

News December 17, 2024

தரம் இல்லாத பொருள்களை விற்றால் நடவடிக்கை 

image

இந்திய அரசு ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத மற்றும் தரம் இல்லாத வீட்டு உபயோக மின் சாதனங்கள், மின் உபகரணங்கள், இரும்பு மற்றும் துரு பிடிக்காத எஃகு பொருட்கள், தரமற்ற சிமெண்ட் தயாரித்து மற்றும் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளார்.

News December 17, 2024

ஆறு பேருக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் – ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன், பயிற்சி உதவி ஆட்சியர் உத்கரஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

News December 17, 2024

தஞ்சையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர்

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தியில், மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 20ஆம் தேதி காலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலி பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு தேர்வு செய்ய உள்ளனர். இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News December 17, 2024

தஞ்சை: குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு

image

தஞ்சை வெண்ணாறு வடகரை சாலையில் நவ.8ஆம் தேதி நின்ற காரின் இருக்கையின் அடியில் 136.6 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ரவிச்சந்திரன், சுப்பிரமணியன், டேவிட் பெர்னாண்டோ, அய்யப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி. பரிந்துரை பேரில் 4 போரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். நேற்று 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News December 16, 2024

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

தஞ்சை அர்பன், ஆவணியாபுரம், சாக்கோட்டை, தஞ்சை நகர் பகுதி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச. 17) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளன. இதனால் கீழவாசல், திலகா்திடல், கரம்பை, சாலைக்காரத் தெரு, ராவுத்தாபாளையம், பழைய பேருந்து நிலையம், பழைய மாரியம்மன் கோவில், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில் சாலை உள்ளிட்ட பிற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News December 16, 2024

தஞ்சையில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை அதிகாரிகள், வல்லுநர்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள் அடங்கிய குழுவினர் கிராமங்கள் தோறும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்க உள்ளனர். இந்த பயிற்சியானது டிசம்பர் 24 முதல் நடைபெற உள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News December 15, 2024

தஞ்சாவூரில் 17 ஆம் தேதி மின்தடை

image

தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேந்திரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேம்பாலம், மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி, மகர்நோன்பு சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், ஆடக்காரத்தெரு, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News December 15, 2024

தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 2,430 வழக்குகளுக்கு தீர்வு

image

தஞ்சை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,430 வழக்குகளில் ரூ.11.68 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிபதி கே. பூரண ஜெய ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 2,430 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

error: Content is protected !!