Thanjavur

News December 23, 2024

பேராவூரணி வீட்டின் கதவை உடைத்து திருட்டு

image

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வீ.வடிவழகன் (52). விசைப்படகு உரிமையாளர், யாரும் இல்லாத போது இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவுக்குள் இருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 22, 2024

தஞ்சை: டிப்பர் லாரி மோதி ஒருவர் பலி

image

திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவர் நேற்று மாலை திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சைக்கிளில் திருச்சென்னம்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். காவிரி புதுப்பாலம் அருகில் எதிரில் வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 22, 2024

பள்ளி கட்டடங்களை திறந்து வைக்கும் முதல்வர்

image

முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், பேராவூரணி, ஒரத்தநாடு, அம்மாபேட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக நாளை 23 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News December 22, 2024

தஞ்சை: இரண்டு நாட்கள் பெய்த மழையில் 37 வீடுகள் சேதம்

image

தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பகல் வேலைகளில் வெயில் வாட்டி வந்த போதும், இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 37 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.

News December 22, 2024

திருக்காட்டுப்பள்ளியில் லாரி மோதி விவசாயி பலி

image

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்செனம் பூண்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (48). விவசாயியான இவர் நேற்று மாலை திருக்காட்டுப்பள்ளிக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்ற போது புதிய காவிரி ஆற்று பாலம் அருகே பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சீனிவாசன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 21, 2024

தஞ்சை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

image

தஞ்சை மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் கடைகளில் சோதனையின் போது ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

News December 21, 2024

தஞ்சை கஞ்சா குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: ஆட்சியர்

image

முடச்சிக்காடு பகுதியில் கடந்த 22 ஆம் தேதி 330 கிலோ கஞ்சாவை கடல் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற பிரமுராஜ் (34), அண்ணாதுரை(44), முத்தையா(60) ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ய, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு.

News December 21, 2024

தஞ்சையில் 30 கடைகளுக்கு அபராதம்: மாநகராட்சி அதிரடி

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தலின் பேரில், தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் அருகிலுள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 30 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மொத்தமாக ரூ.10,000 அபராதம் விதித்தனர்.

News December 20, 2024

சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ்

image

தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன் தஞ்சை சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் மற்றும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய அறிவுரை (ம) ஆலோசனைகளை வழங்கினார்

News December 20, 2024

தஞ்சை மாவட்ட பிற பகுதியில் மின்தடை

image

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை,தெலுங்கன்குடிக்காடு, துவரங்குறிச்சி திருமலை, விஷ்ணம்பேட்டை திருக்காட்டுப்பள்ளி, உள்ளிட்ட பிற துணை மின்நிலையங்களில் நாளை (டிச.21) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. 

error: Content is protected !!