Thanjavur

News December 29, 2024

தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் கைது

image

தஞ்சை அருகே களிமேடு பரிசுத்தம் நகரை சேர்ந்தவர் மதிவாணன் (64). இவர் சம்பவத்தன்று 8 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வல்லம் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதையடுத்து போலீசார் மதிவாணன் போக்ஸோவின் கீழ் வழக்குப் பபதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 28, 2024

கர்நாடகாவில் இருந்து தஞ்சை வந்த 1,300 டன் யூரியா உரம்

image

கர்நாடக மாநிலத்திலிருந்து சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1,300 டன் யூரியா உரம் தஞ்சை ரயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதனையடுத்து இந்த உர மூட்டைகள் தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது.

News December 28, 2024

தஞ்சை மாவட்டத்தில் 32,299 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2024-25 ஆண்டுக்கான சம்பா பருவத்தில் 3 லட்சத்தி 23 ஆயிரத்து ஏக்கரில் நடுவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்ஜல் புயல் காரணமாக 32 ஆயிரத்து 299 ஏக்கரில் நெற்பயிர்கள் ‌ பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் அவர். 

News December 28, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,1920 டன் நெல் கொள்முதல்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பு பருவத்தில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த 22 ஆம் தேதி வரை 1,192 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 409 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் ஒரு கோடி மின்னணு வங்கி பண பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

பெண் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் ஒருவர் கைது

image

ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவர் உடல்நலவு குறைவு காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவ கல்லூரி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கரிகாலனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 28, 2024

தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சனி ஞாயிறு வார விடுமுறையையொட்டி கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக சென்னைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை நாகை, வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், ஆகிய ஊா்களுக்கு 190 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News December 27, 2024

தேவாலயங்களை பழுது பார்க்க மானியத்துடன் நிதி

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்காக மானியத்துடன் நிதி வழங்கப்படுகிறது. 10 வருட பழமையான தேவாலயத்திற்கு 10 லட்சம் ரூபாயும், 20 வருடத்திற்கு மேல் பழமையான ஆலயத்திற்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 26, 2024

விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

image

தஞ்சாவூரில் தமிழக அரசால் ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மையினர் பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு பெண்கள் தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும், கைம்பெண் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே தகுதி உடையவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News December 26, 2024

தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழப்பு

image

தஞ்சை பாலாஜி நகரை சேர்ந்தவர் கீர்த்திகா(27). இவர் கடந்த 17ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த போது கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த கீர்த்திகாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கீர்த்திகா சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.

News December 26, 2024

தஞ்சை : விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!