Thanjavur

News January 6, 2025

மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரியவரிடம் ஒப்படைப்பு

image

கும்பகோணம் மேற்கு காவல் நிலைய எல்லைப் பகுதியில் கைபேசிகள் திருடு போனது பற்றி பல புகாா்கள் வரப்பெற்றன அதன் பேரில், போலீஸாா் தனிப்படை அமைத்து திருடு போன கைபபேசிகளை மீட்டனா்.அவற்றை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு துணைக்கோட்ட காவல் கண்காணிப்பாளா் கீர்த்தி வாசன் தலைமையில் நேற்று மேற்கு காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் 5 லட்சம் மதிப்புள்ள 28 கைபேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

News January 6, 2025

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில், மணிமண்டபம், முள்ளுக்குடி, வீரநரசன்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.07) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால்,முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2025

திருவையாறு: பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் பலி

image

திருவையாறை அடுத்த தில்லைஸ்தானம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இலங்கேஸ்வரன் (28). தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி இவருக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று இலங்கேஸ்வரன் பணியை முடித்து விட்டு தனியார் பேருந்து ஒன்றில் வீடு திரும்பிய போது, நிலைத் தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2025

புலவஞ்சி ஊராட்சி கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர்

image

மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன் அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை சந்திரசேகரன், திரு.கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் , பலர் கலந்து கொண்டனர்.

News January 4, 2025

கள்ளச் சந்தையில் மது விற்பனை 90 மது பாட்டில்கள் பறிமுதல்

image

நாஞ்சில் கோட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(52) என்பதும், கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய 90 மது பாட்டில்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 4, 2025

திருவையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவர் 12 வயதான 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.அதன் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர்.

News January 4, 2025

தஞ்சை ஆட்சியர் அறிவிப்பு

image

சீர் மரபினர் நல வாரியத்தில் சேர்ந்து நலத்திட்ட உதவிகள் பெற சீர் மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். எனவே இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திட பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் ஜன.7 மற்றும் பேராவூரணி வட்ட அலுவலகத்தில் ஜன.10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News January 4, 2025

தஞ்சையில் புதிய எஸ்.பி பதவியேற்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஆர்.ராஜாராம் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (ஜன.4) சனிக்கிழமை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆர்.ராஜாராம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

News January 3, 2025

சுவாமிமலையில் நடிகர் விமல் சாமி தரிசனம் 

image

கும்பகோணம் வட்டம் அடுத்த சுவாமி மலை கோவிலில் மார்கழி மாத பூஜை நடைபெற்ற வருகிறது. இதனை தொடர்ந்து இன்று 03.01. 2025 காலை 6 மணி அளவில் களவாணி பட நடிகர் விமல் மற்றும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் சுவாமி மலையில் உள்ள முருகனை தரிசித்து ஆசி பெற்றனர் .

News January 3, 2025

விவசாயிகளுக்கு தஞ்சை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் வேளாண்மை பொறியியல்துறை சார்பில் சிறு குறு விவசாயிகள் தங்களது பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார்கள் வாங்கவும், புதிய விவசாய இணைப்புகளுக்கு புதிய மின் மோட்டார்கள் வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது. மொத்த விலையில் 50% (அ) அதிகபட்சமாக 15,000 ரூபாய் மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!