Thanjavur

News January 11, 2025

தஞ்சை மாவட்டத்தில் மது விற்பனைக்கு 2 நாட்கள் தடை

image

தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான விற்பனை கடைகள், அத்துடன் இணைத்த மதுபான கூடங்கள் மற்றும் தனியார் விடுதிகளில் உள்ள மதுகூடங்களில் வரும் 15-ஆம் தேதி (மாட்டுப் பொங்கல்) மற்றும் 26-ஆம் (குடியரசு தினம்) ஆகிய தினங்களில் மது விற்பனை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். இந்த தகவலை உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்..

News January 10, 2025

புகையில்லா போகி பண்டிகை – ஆட்சியர் வேண்டுகோள்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போகி பண்டிகை ஒட்டி பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்கள், டயர் (ம) டியூப் போன்ற பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே காற்றின் தரத்தை பாதுகாக்க புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

News January 10, 2025

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 இளம்பெண்கள் மீட்பு: உரிமையாளர் கைது

image

தஞ்சாவூர் எல்.ஐ.சி., காலனியில் உள்ள ட்ரீம்ஸ் ஸ்பா என்ற பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தெற்கு போலீசார் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். சோதனையில் பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கு இருந்த நான்கு பெண்களை மீட்டனர். மேலும் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஸ்பா உரிமையாளர் அபிசத்யா என்பவரை  கைது செய்தனர்.

News January 10, 2025

தஞ்சை: மத்திய அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

image

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் – தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும் உண்டுறைவிட பள்ளி சிபிஎஸ்சி பாடத்திட்டத்தினை கொண்ட அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான 6 வகுப்பு முதல் 9 வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உடையர்கள் வரும் 13ஆம் தேதிக்குள் <>LINK<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொது விநியோக குறைதீர் கூட்டம் வருகிற 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் புகார் அளித்து தீர்வு காணலாம் என கூறப்பட்டுள்ளது.

News January 10, 2025

தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி வேண்டுகோள்

image

தஞ்சை மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு, காவல்துறை, அரசு போக்கு கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

News January 10, 2025

திட்டமிட்டு உழைத்தால் போட்டி தேர்வில் சாதிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

image

தஞ்சை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் அரசு பணி என்பது மதிப்பை உயர்த்தும், பெற்றோருக்கு பெருமையை தரும். கடின உழைப்பும் முறையான பயிற்சியும் வெற்றி பெற உதவும். திட்டமிட்டு படித்தால் போட்டி தேர்வுகளில் சாதிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

News January 10, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள் மற்றும் ரசாயனம் கலந்த பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நடப்பாண்டில் உரிய வழிமுறைகளை பின்பற்றி ‘மாசற்ற போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்’ என தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். SHARE NOW!

News January 10, 2025

திருக்காட்டுப்பள்ளி அருகே தந்தைக்கு அரிவாள் வெட்டு: மகன் கைது

image

நேமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கிலிமுத்து (60). இவர் தனது ஆட்டுக்குட்டி சரியாக கவனிக்காததால் இறந்து விட்டதாக தன் மகன் கார்த்தியை (38) கண்டித்தாராம். இதில் ஆத்திரமடைந்த கார்த்தி கையில் இருந்த அரிவாளால் தந்தையை வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்தபுகாரின் பெயரில் கார்த்தியை கைது செய்தனர்.

News January 9, 2025

தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு வாரம் பேரணி

image

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து 36 வது ஆண்டு சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய மாபெரும் சாலை பாதுகாப்பு பேரணியை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பூரண ஜெய ஆனந்த் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் காவல்துறையினர் வழக்கறிஞர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!