India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (ஜன.21) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் திருக்கானுர்பட்டி, குருங்குளம், ஆடுதுறை, பேராவூரணி, கும்பகோணம் கிராமப்புற பகுதிகள், தஞ்சாவூர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. SHARE NOW!
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து வரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலராக தற்காலிக பதவி உயர்வுடன் கூடிய பணி நியமனமும், நிர்வாக நலன் கருதி வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணியிட மாறுதல் வழங்கியும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், 3 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,பிப்ரவரி 3-ம் தேதி காலை 7.25 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. பின்னா், 7-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் முதல் கால யாக பூஜையும், பிப்ரவரி-10 காலை 9.30-10.30 க்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருக்காட்டுப்பள்ளி சேதுபதி (28). ஐடிஐ முடித்துவிட்டு சிங்கப்பூரில் தனியார் கம்பெனியில் மெக்கானிக் சூப்பர்வைசராக பணி புரியும் போது அவருடன் பணியில் இருந்த சுமிதா என்ற மியான்மர் நாட்டு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் அதனை தொடர்ந்து இன்று திருக்காட்டுப்பள்ளி – பூண்டியில் தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 30 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இன்று (ஜன.19) மதியம் 1 வரை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் தஞ்சை அறிவுசார் மையத்தில் நாளை (ஜன.20) மதியம் 1.30 மணி முதல் TNPSC குரூப்-1, 2, 4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கணினிகள், இணையதள வசதி, புத்தங்கங்கள், செய்தித்தாள், உணவு என அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த இலவச பயிற்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனத் அறிவுசார் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (18-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், கும்பகோணம் நகர், ராஜந்தோட்டம், பட்டுக்கோட்டை டவுன், துவரங்குறிச்சி, ஒரத்தநாடு 33 கி.வி. ரேஷியோ மட்டும், நகரம், புதூர், கருக்கடிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்து வந்தது. பண்டிகை என்றாலே அதில் மதுவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையை ஒட்டி மது பிரியர்கள் மூலம் ரூபாய்.20 3/4 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. மதுக்கடை விடுமுறை நாட்களில் மது பாட்டில்கள் இரண்டு மடங்கு வரை விற்கப்படுகிறது .
தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நாள் விழா (ஜன-17) தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் தனது ஆரம்ப கல்வியை கும்பகோணத்தில் உள்ள யானையடி தொடக்க பள்ளியில் 1922 -1925 பயின்றார். இந்நிலையில் தான் முதல்வரான பிறகு மீண்டும் அதே பள்ளிக்குச் சென்ற அவர், பள்ளி சேர்க்கை பதிவேட்டில் தனது பெயரை கண்டு கண்கலங்கியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் 138 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாக கடந்த ஜன.13,14 ஆகிய தேதிகளில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ரூ.20 கோடியே 79 லட்சத்து 2 ஆயிரத்து 795-க்கு மது விற்பனையாகி உள்ளது. மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், மதுப்பிரியர்கள் தைப்பொங்கல் தினத்தன்றே மதுவை வாங்கி குவித்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.