India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 98-102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
திருச்சேரை சாரநாதப் பெருமாள் கோயில்108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். இது 1000 ஆண்டு பழமையான கோயிலாகும். இங்குள்ள பெருமாளை ஒருமுறை வணங்கினால் காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்குமாம். கடன் தொல்லை நீங்க, செல்வம் பெருக, வறுமை விலக திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில், உத்தமர் கோயில், புருஷோத்தம பெருமாள் கோயில் ஆகிய கோயில்களைப் போற்றி வணங்கலாம். இந்த தகவலை SHARE செய்யவும்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் நிலுவை மற்றும் நடப்பாண்டு சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி ஆகியவற்றை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வரி பாக்கியினை ஊராட்சி அலுவலகத்திலோ, வரிவசூல் முகாம்களிலோ, செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம். மேலும், குடிநீர் வரி செலுத்தாதவர்களின் வீட்டுக் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க
தஞ்சையில் சோழர்கள் ஆட்சிக்கு பின்பு, மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாலிக்காபூர் படையெடுப்பின்போது, மாளிகைகள், மண்டபங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. இப்போதுள்ள அரண்மனைதான் ராஜராஜ சோழன் காலத்தில் அரண்மனையாக இருந்ததாக சில ஆய்வாளர்களும், தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் அரண்மனை இருந்ததாக சில ஆய்வாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். உங்கள் கருத்தை COMMENT-ல் சொல்லுங்க…SHARE பண்ணுங்க.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் சிதம்பரம்(72) என்பவரது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி கடந்த 2014 முதல் 2017 வரை ஒவ்வொரு தவணையாக சுமார் 1.63 கோடி ரூபாய் மற்றும் வீடு ஒன்றை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார் என்று சிதம்பரம், மோகன்தாஸ் மீது மாவட்ட காவல் கண்காணிப்பார் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் மோகன்தாஸை கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் ஒரத்தநாடு எம்எல்ஏ ஆர்.வைத்தியலிங்கம் பேசும்போது, “தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு தஞ்சையில் 100 அடியில் சிலை வைக்க வேண்டும்” என்றார். அதற்கு அமைச்சர் சேகர்பாபு “சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அதற்கு வாய்ப்பிருந்தால் நிச்சயம் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்படும்” என்று கூறினார். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க மற்றும் உங்கள் கருத்தை COMMENT-ல் சொல்லுங்க…
தஞ்சை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அஸ்லம்கான் என்ற 70 வயதுடைய முதியவர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு அஸ்லம்கான் பாலியல் தொல்லை அளித்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வேளாண்மை அரசு துறை சார் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் எனவும் ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) டெக்னீசியன் பிரிவில் 17 காலியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 18-28 வயதுடைய பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் cbri.res.in என்ற இனையம் மூலம் 15.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், இதனை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..
தஞ்சாவூர் மாவட்டம், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 589 கிராம ஊராட்சிகளில் நிலுவை மற்றும் நடப்பாண்டு சொத்துவரி,குடிநீர் கட்டணம், தொழில்வரி,தொழில் உரிமம் கட்டணம் 31-க்குள் செலுத்திட வேண்டும்.நிலுவை மற்றும் நடப்பாண்டிற்கான வரியினங்களை ஊராட்சி அலுவலகத்தில், வரிவசூல் வீட்டுவரி https://vptax.tnrd.gov.in VP Tax Online Portal, பேட்டிஎம், ஜீபே, செலுத்தலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.