Thanjavur

News April 23, 2025

தஞ்சாவூர் வழியாக திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

image

தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக திருச்சி – தாம்பரம் இடையே (ஏப்ரல்.29) ஆம் தேதி முதல் ஜன சதாப்தி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகம் நெரிசலைத் தவிர்க்க திருச்சி -தாம்பரம் இடையே ஜன சதாப்தி சிறப்பு விரைவு ரயில் (ஏப்.29) முதல் (ஜூன்.29)வரை வாரந்தோறும் செவ்வாய், புதன் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.

News April 23, 2025

தஞ்சாவூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சையில் செயல்பட்டு வரும் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கல்வி சேர்க்கை நடைபெறுகிறது. 1ஆம் முதல் 11ஆம் வகுப்பு வரை நடைபெறும் இந்த சேர்க்கை முகாமில் தஞ்சை மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பார்வைத்திறன் குறைவுடைய மாணவர்கள் சேர்ந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

அங்கன்வாடியில் அரசு வேலை

image

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 124 அங்கன்வாடி பணியாளர், 29 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 145 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை தகுதியுடையவர்கள் இன்றைக்குள் (ஏப்.23) இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 23, 2025

மின்சாரம் தாக்கி காய்கறி வியாபாரி பலி 

image

செங்கிப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் சேக் மவுலானா (53). இவர் தனது சகோதரி வீட்டில் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் குடிநீர் தொட்டியின் அருகில் குளிக்க சென்றுள்ளார். அப்போது குடிநீர் தொட்டியின் மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் அதன் அருகில் சென்ற சேக் மவுலானா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 22, 2025

தஞ்சாவூர்: பெரிய கோவிலில் நாளை கொடியேற்றம்

image

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாள்கள் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல் இந்தாண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. நாளை(ஏப்.23) காலை 9 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே.7ஆம் தேதி நடைபெறுகிறது.

News April 22, 2025

தஞ்சாவூர்: கோடைகால பயிற்சி முகாம்

image

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 18 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதில் தடகளம், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

News April 22, 2025

தஞ்சை மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய எண்கள்

image

▶வட்டார வளர்ச்சி அலுவலர் (சேதுபாவாசத்திரம்) – 04373-232438, ▶வட்டார வளர்ச்சி அலுவலர் (பேராவூரணி) – 04373-290748, ▶வட்டார வளர்ச்சி அலுவலர் (பட்டுக்கோட்டை) – 04373-252863, ▶வட்டார வளர்ச்சி அலுவலர் (கும்பகோணம்) – 0435-2410424, ▶வட்டார வளர்ச்சி அலுவலர் (தஞ்சாவூர்) – 04362-236451, ▶வட்டார வளர்ச்சி அலுவலர் (திருவையாறு) – 04362-260522, ▶ வட்டார வளர்ச்சி அலுவலர் (ஒரத்தநாடு) – 04372-233232 ஷேர் பண்ணுங்க

News April 22, 2025

தஞ்சையில் வேலை வாய்ப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Sales Executive பதவிக்கு 50 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 22, 2025

வாய்க்காலில் மிதந்த அடையாளம் தெரியாத உடல்

image

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் உள்ள மோரி வாய்க்காலில் நேற்று இறந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் மிதந்துள்ளது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து அவர் யார், எப்படி என்பதை பற்றி விசாரித்து வருகின்றனர்.

News April 21, 2025

தஞ்சை: திருமணத்தடை நீக்கும் ஆகாசபுரீஸ்வரர்

image

தஞ்சாவூர் மாவட்டம் கடுவெளியில் ஆகாசபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோலில் திருமணமாகாதவர்கள் இங்குச் சென்று தங்களது நட்சத்திர நாளில் மூலவர் சன்னதியில் சாம்பிராணி புகைவிட்டுப் பிரார்த்தித்தால், நீண்ட நாள் திருமணத்தடை நீங்கும். உடனே வரன் தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்கள்.

error: Content is protected !!