Thanjavur

News February 18, 2025

தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர் சங்கத்தினர் 59 பேர் கைது

image

யூ.ஜி.சி. வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரி பழைய பாதாள காளியம்மன் கோயில் அருகே இருந்து ஊர்வலமாக மாணவர் சங்கத்தினர் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 17, 2025

பொதுமக்களிடமிருந்து 835 புகார் மனுக்கள் பெறப்பட்டன

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட 835 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.

News February 17, 2025

தஞ்சை மாவட்டம் ஆட்சியர் 835 மனுக்களை பெற்றார்

image

தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 835 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உரிய சம்பந்தப்பட்ட அவர்களிடம் வழங்கினார்கள்.

News February 17, 2025

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்பட்டது

image

தஞ்சாவூர் மாவட்ட அலுவலகக் கூட்டரங்கில் இன்று (17.02.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவியாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையினை நிலகிரி தெற்கு தோட்டம் கிராமத்தினை சேர்ந்த செல்வன் பிரகதீஸ்வரன் என்பவர் கல்லணை கால்வாய் புது ஆற்றில் மூழ்கி இறந்ததால் நிதி உதவியை அவரது தந்தையிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். SHARE NOW.

News February 16, 2025

தஞ்சை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை

image

தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 14 அலுவலக உதவியாளர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், ஜூனியர் மெக்கானிக், திறமையான உதவியாளர், உடற்கல்வி இயக்குனர் & விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2025 ஆகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் <>லிங்க் <<>> இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

News February 15, 2025

தஞ்சையில் நடிகர் பிரபு அஞ்சலி 

image

தஞ்சை காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணசாமியின்  மனைவி இராஜேஸ்வரி உடல் நலக் குறைவால் நேற்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல் தஞ்சை சாந்தி கமலா தியேட்டர் அருகே உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினர், உள்ளூர் மக்கள்,என அஞ்சலி செலுத்தும் வருகின்றனர். நடிகர் பிரபு இராஜேஸ்வரி புடவை போர்த்தி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

News February 15, 2025

தீராத கடன் பிரச்சினை இருக்கா – இந்த கோயிலுக்கு போங்க

image

கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருச்சேறை கிராமத்தில் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ருணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டால் தீராத கடன் பிரச்சனையும், முற்பிறவியில் செய்த பாவங்களும் தீரும் என்பது ஐதீகம். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரிய ஒளி இங்குள்ள சுவாமி அம்பாள் மீது நேரடியாக விழுவது தனி சிறப்பு.

News February 15, 2025

தஞ்சையில் 27,667 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்

image

தஞ்சை கல்வி மாவட்டத்தில் 70 மையங்களில் 140 பள்ளிகளை சேர்ந்த 8,616 மாணவர்களும், 7,929 மாணவிகள் என மொத்தம் 16,545 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 40 மையங்களில் 89 பள்ளிகளை சேர்ந்த 6042 மாணவர்களும், 5080 மாணவிகளும் என மொத்தம் 11,122 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்.

News February 15, 2025

தஞ்சையில் உதவித்தொகையுடன் கூடிய இலவச பயிற்சி

image

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலைரகுமான் நகரில் உள்ள இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி வகுப்புகள் ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தையல், அழகுகலை, பேக்கரி மற்றும் கேட்டரிங் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

error: Content is protected !!