India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டம் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் NAKSHA திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப அவர்கள் இன்று (18.02.2025) துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.துரை.சந்திரசேகரன் அவர்கள் (திருவையாறு), திரு.டி.கே.ஜி. நீலமேகம், மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கண்டியூர் அருகே மேலத்திருப்பந்துருத்தி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்திட தஞ்சாவூர், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு வின் படி நாளை காலை 10 மணி மக்கள் நேர்காணல் முகாம் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு இதன்மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு கீழே அமைந்துள்ளது தாயுமானவ சுவாமி கோயில். தாயுமானவரை மனம் உருகி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் கர்ப்பிணி பெண்கள் வாழைத்தார் வாங்கி தொட்டில் கட்டி வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என கூறப்படுகிறது. இங்கு சித்திரை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கான மருந்து வழங்கப்படுவது விசேஷமாகும்
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே வருகிற 21ஆம் தேதி தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் காவேரி சிறப்பங்காடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை வளாகத்தில் திறக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வி.தமிழ்நங்கை அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
தஞ்சையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், சென்னையில் வேலை செய்த போது 14 வயது சிறுமிடம் பழக்கம் ஏற்பட்டது. ஜெகதீஸ்வரன் சிறுமியை, தஞ்சை வரசொல்லிய நிலையில், ஜெகதீஸ் மாயமானார். பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுமிக்கு உதவி செய்வது போல் நடித்து புவனேஷ்வரன் என்பவர் வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் வெளிவர காதலன் ஜெகதீஸ்வரன், புவனேஷ்வரனை போலீஸ் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகில் உள்ள கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வரர் சுவாமி திருத்தலத்தின் தல வரலாற்றின் படி, இங்கு ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்ட அமுதக்கிணறு எனும் தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ கோடீஸ்வரர் சுவாமியை வணங்கினால் அழகிய உருவம் பெறலாம் என்பது ஐதீகம். இப்போதும் பலர் இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெற வேண்டி கொள்கிறார்கள்.
யூ.ஜி.சி. வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரி பழைய பாதாள காளியம்மன் கோயில் அருகே இருந்து ஊர்வலமாக மாணவர் சங்கத்தினர் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட 835 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.
தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 835 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உரிய சம்பந்தப்பட்ட அவர்களிடம் வழங்கினார்கள்.
Sorry, no posts matched your criteria.