India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கும்பகோணம் தபால் கோட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். கும்பகோணம் தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கும்பகோணம் பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது.
தஞ்சை, பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த வேலையில் இன்று (12.04.2024) காலை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மற்றும் தேர்தல் வேலையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சையில் 14, 16-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி தேர்வு நாளை சனிக்கிழமையும், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு வருகிற 14-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் தேர்வு நடக்கிறது. இதில் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வெள்ளை சீருடையில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தஞ்சை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவில் மாலை 4.40 மணிக்கு பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் நாடியம்மன் வீதிவலம் தொடங்கியது. தேரடித்தெரு, வடசேரி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு வழியாக தேர் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காவல் துறை வாகனம், ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்தப்படும் நீல, சிவப்பு நிற ஒளி விளக்குகளை முறையான அனுமதியின்றி தனியார் வாகனத்தில் பயன்படுத்தினால் மோட்டார் வாகன சட்டத்தின்படி, தொடர்புடைய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தது.
I.N.D.I.A. கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை ஆதரித்து, நேற்று மாலை (ஏப்ரல்.10) கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.செல்வ பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில், சு.கல்யாணசுந்தரம் எம்.பி, செ.ராமலிங்கம் எம்.பி மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
தஞ்சை தொகுதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கும் பணி நடைபெறுவதை நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக நாளை 11.04.2024 தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.