Thanjavur

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

சரக்கு வாகனம் மோதி 4 பேர் உயிரிழப்பு

image

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வளம்பக்குடி அருகே சமயபுரம் பாதயாத்திரை செய்த பக்தர்கள் மீது இன்று காலை மினி லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பக்தர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மேல்சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 16, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மாலை 7 மணி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 16, 2024

தஞ்சை ஆட்சியர் இடமாற்றம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிரியங்கா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக பிரியங்கா ஐ.ஏ.எஸ். இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

image

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் வரும் 22ஆம் தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சியும், 23ஆம் தேதி நாட்டுக்கோழி மற்றும் காடை வளர்ப்பு பயிற்சியும், 24ஆம் தேதி முயல் வளர்ப்பு பயிற்சியும் நடைபெறுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 16, 2024

தஞ்சையில் வேலை வாய்ப்பு முகாம்

image

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதம் தோறும் 3வது வெள்ளிக்கிழமை அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதேபோல் வருகிற 19ஆம் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில், பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் தீபக் ஜேக்கப் கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 15, 2024

497 புகார் மனுக்கள் பெறப்பட்டது – ஆட்சியர்

image

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடன், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 497 புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.

News July 15, 2024

141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,870 மாணவர்கள் பயன்

image

ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,870 மாணவ – மாணவிகள் பயன் பெறுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல்.

error: Content is protected !!