India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 2024 – 2025 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை பட்டப்படிப்பு, முதுகலை அறிவியல், எம்.எஸ்.டபிள்யூ, எம்.எப்.ஏ, எம்.பி.ஏ, முதல்நிலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு <
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு மயக்கவியல் துறை பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் புகார் எழுந்தது. இதனையடுத்து விசாக கமிட்டி மற்றும் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமையில் நேற்று கல்லூரி மாணவ – மாணவிகளிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீங்கியதால் , தஞ்சாவூர் மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் முதல் ரக பல்லாரி 50 கிலோ கொண்ட மூட்டை 1,200 விற்க்கப்பட்ட நிலையில் தற்போது 1,600 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 1,100 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் தற்போது 1,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 1 கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.60-க்கு விற்கிறது
தஞ்சாவூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது ராஜராஜசோழன் மணிமண்டபம். தஞ்சாவூரின் புகழ்பெற்ற மன்னராக இருந்த ராஜராஜ சோழனின் 1000 ஆவது பிறந்தநாளின் நினைவாக 1984 இல் கட்டப்பட்ட ஒரு அருங்காட்சியகம் தரை தளத்தில் உள்ளது. இது தொன்மையான சிற்பங்களை வைத்திருக்கும் அருங்காட்சியகமாகவும் செயல்பட்டு வருகிறது. மேலும் இதில் ராஜராஜனின் சிலைகள், ஓவியங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோடையின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 258 பள்ளிகளில் 95 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 149 பள்ளிகளில் 34 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதம் அடைந்துள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் RTE இடஒதுக்கீடு அடிப்படையில் மெட்ரிகுலேஷன் – நர்சரி & ப்ரைமரி பள்ளிகள் மொத்தம் 284 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 2,984 இடங்கள் உள்ளதாகவும், இதில் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதனையடுத்து தகுதிபெற்ற மற்றும் தகுதி பெறாத மாணவர்கள் விவரம் 27ம் தேதி வெளியிடப்படும் எனவும் கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90.87% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.41 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.14 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று தஞ்சாவூர் மாவட்டம் 13ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தஞ்சாவூர் 93.40% சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் 90.87% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 6,019 பேர் தேர்வு எழுதி 5,261 தேர்ச்சி; 6,380 மாணவிகள் தேர்வு எழுதி 6,006 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 12,399 பேர் தேர்வு எழுதி 11,267 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.