India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் 83.37% பேரும், மாணவியர் 94.09% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 89.07% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் 27வது இடத்தை பிடித்துள்ளது.
தென்மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால், தஞ்சை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், ஆடுதுறை திருமங்கலக்குடி, நரசிங்க பேட்டை, திருபுவனம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் வெப்பம் தனிந்து இதமான சூழல் நிலவுகிறது. மேலும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், நெய்குன்னத்தில் திமுக நிர்வாகி கலைவாணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு(மே 12) தனது வயலுக்கு சென்ற கலைவாணன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலன் காக்கும் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக உள்ளது. இந்த திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டம் மூலம் 4,17,999 பேர் பயன் அடைந்து வருகின்றனர் என கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு மயக்கவியல் துறை பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் புகார் எழுந்தது. இதனையடுத்து விசாக கமிட்டி மற்றும் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமையில் நேற்று கல்லூரி மாணவ – மாணவிகளிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிற வெறியை தூண்டும் விதமாக பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் தஞ்சை தலைமை தபால் அலுவலகம் அருகே பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 2024 – 2025 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை பட்டப்படிப்பு, முதுகலை அறிவியல், எம்.எஸ்.டபிள்யூ, எம்.எப்.ஏ, எம்.பி.ஏ, முதல்நிலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு <
Sorry, no posts matched your criteria.