India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பது போன்ற சட்டவிரோத செயல்களில் எவரேனும் ஈடுபடுவது தெரியவந்தால், கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் வாட்ஸ்அப் செயலி எண் 9042839147 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் பெயர் மற்றும் விலாசம் ரகசியம் காக்கப்படும் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் மாவட்டத்தில் முதலமைச்சரின் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பணிகள், முன்னேற்றம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் விழுதியூர் ஊராட்சியில் விழுதியூர் மாணவர்களும் பொதுமக்களும் தற்போது 15 கிலோமீட்டர் சுற்றி அம்மாபேட்டைக்கு வர வேண்டி உள்ளது. இந்த நிலையில் ஐவேலிதோட்டத்தில் வெண்ணாற்றில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக வெண்ணாற்று கரையில் சாலை அமைக்க கோரி நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டமானது அமைதி பேச்சு வார்த்தைக்கு பின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாமில் திருநங்கைகள் பங்கேற்று அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை பெற்று பயனடையுமாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தனிநபர் கடன், கல்வி கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த, பார்சி (ம) ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாமில் திருநங்கைகள் பங்கேற்று அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை பெற்று பயனடையுமாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் தீபக் ஜேக்கப் இன்று(20.6.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ் உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் பலர் உள்ளனர்.
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி எம்பி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி ஆர் லோகநாதன் தலைமையில் நேற்று(ஜூன்19) கும்பகோணம் காங்கிரஸ் அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர் .சுதா துவங்கி வைத்தார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(ஜுன்19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தஞ்சாவூர்,பாபநாசம்,திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், வல்லம், ஒரத்தநாடு ஆகிய உட்கோட்டங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு சுமார் 308 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு. தஞ்சாவூர் 34 மிமீ, வல்லம் 20 மிமீ, குருங்குளம் 36.20 மிமீ, திருவையாறு 23 மிமீ, கும்பகோணம் 26 மிமீ, பாபநாசம் 40 மிமீ, கீழ் அணை 54.80 மிமீ, அய்யம்பேட்டை 24 மிமீ, ஈச்சன்விடுதி 12.40 மிமீ, பூதலூர் 15.60 மிமீ பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 317.80 மிமீ அளவிற்கு பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.