India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் காமராஜ் மார்க்கெட் சந்தையில் கடந்த வாரங்களில் தக்காளி வரத்து குறைவால், கிலோ 80 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் பிற மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், இன்று ஒரு கிலோ தக்காளி விலை 40 ரூபாய்க்கு குறைந்தது. மேலும் சில்லரை விலையில் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் இஆப முன்னிலையில் இன்று (25.6.24) நடைபெற்றது. உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் மாவட்ட திட்டமிடல் மற்றும் ஊராட்சி செயலர் பாரதிதாசன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றார். இந்நிலையில், இன்று அவர் எம்.பியாக பதவி ஏற்கும் போது “வாழ்க தமிழ், பெரியர், அண்ணா, கலைஞர் புகழ் ஓங்குக, வளர்க ஸ்டாலின், எங்களின் அடுத்த தலைவர் அண்ணன் உதயநிதி. காவிரியில் நீர் திறந்து டெல்டா விவசாயிகளை காப்பாற்று” என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சமையல் கூடத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு இன்று 25.6.24 ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி கலெக்டர் பயிற்சி உத்கர்ஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முரசொலி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
தஞ்சையில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் தேவாலயங்களை புனரமைப்பதற்காக தமிழக அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது. 15வருட பழமையான கட்டிடத்திற்கு ரூ.10 லட்சமும், 20 வருட கட்டிடத்திற்கு ரூ.15 லட்சமும், 25 வருட கட்டிடத்திற்கு ரூ.20 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. நிதி தேவைப்படுவோர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா் அலுவலகத்தில், மின் நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நாளை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தஞ்சாவூா் நகரியக் கோட்டத்துக்கு உள்பட்ட நகர எல்லை பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், மதுரை உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் பதிவாகி உள்ளது. அதன்படி பட்டுக்கோட்டையில் 3 மிமீ மழை அளவும், அதிராம்பட்டினத்தில் 5.10 மிமீ மழை அளவும், ஈச்சன்விடுதியில் 2 மிமீ மழை அளவும், மதுக்கூரில் 1 மிமீ மழை அளவும், பேராவூரணியில் 10.60 மிமீ மழை அளவும் பதிவாகியுள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பது போன்ற சட்டவிரோத செயல்களில் எவரேனும் ஈடுபடுவது தெரியவந்தால், கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் வாட்ஸ்அப் செயலி எண் 9042839147 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் பெயர் மற்றும் விலாசம் ரகசியம் காக்கப்படும் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.