Thanjavur

News July 5, 2024

குரூப் 2 தேர்வு பயிற்சி; ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு 

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் – 2 (ம) குரூப் 2A தேர்விற்கு 2,327 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் போட்டி தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 8-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார்.

News July 5, 2024

1 ஏக்கருக்கு ரூ.3000 மானியம்

image

தஞ்சை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக பசுந்தீவன உற்பத்தியை பெருக்க பழத்தோட்டம், தோப்புகளில் ஊடுபயிராக பசுந்தீவன பயிர் வளர்த்தல் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 1 ஏக்கருக்கு ரூ.3000 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பிக்க இன்றே(ஜூலை.5) கடைசி நாள்.விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அனுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

வண்டல் மண் எடுத்து கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி – ஆட்சியர்.

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் (ம) மண்பாண்டம் செய்பவர்கள் தங்கள் வசிக்கும் வட்டத்திற்குட்பட்ட நீர் நிலையில் இருந்து வண்டல் மண் (ம) களிமண் எடுத்து பயன்பெற www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலமே அனுமதி பெற்று கொள்ளலாம் எனவும், மாவட்டத்தில் உள்ள 434 நீர்நிலைகளில் இருந்து மண் எடுத்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

வருகிற 16 ஆம் தேதி மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு அடையாள அட்டை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மாற்று திறனாளிகள் இந்த அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் கும்பகோணத்தில் வருகிற 16ஆம் தேதி KMSS வளாகம் பேருந்து நிலையம் அருகே நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்று பயன்பெற ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தல்.

News July 4, 2024

ஆதி திராவிட நலத்துறை தொடக்க பள்ளியில் 27 காலியிடம் – ஆட்சியர்.

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.புதூர், திருநீலக்குடி, கோனோரிராஜாபுரம் , ஆலக்குடி, பெரம்பூர், அனைக்குடி , செய்யாமங்கலம், சித்தர்காடு, ஆடுதுறை பெருமாள்கோவில், பூதலூர், பிள்ளையார்பட்டி, மருதக்குடி, ராயந்தூர் , தோகூர், வடக்கால் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ள அரசு ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தல்.

News July 4, 2024

தஞ்சை: ஆஷாட நவராத்திரி விழா நாளை தொடக்கம்

image

தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. மேலும் 22 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா நாளை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேக, அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

News July 3, 2024

தஞ்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மை துறையில், இரண்டாண்டு முழு நேர பட்டப்படிப்புகளான இளங்கல்வியியல் மற்றும் கல்வியியல் நிறைஞர் படிப்பிற்கு, நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான‌ விண்ணப்பத்தை www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பதிவாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை

image

தஞ்சாவூர் மாவட்டம் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கால தாமதம் இன்றி அடங்கல், விதைப்புச் சான்று வழங்க வேண்டும் என வருவாய்த்துறை ஆய்வாளர்களுக்கும், கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வங்கி மேலாளர்களுக்கும், பொது சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

கோவை, வேலூருக்கு 2,500 டன் புழுங்கல் அரிசி 

image

தஞ்சை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல், அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக பெறப்படும். அவ்வாறு பெறப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும். இதேபோல் வேலூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு பொதுத்திட்டத்தில் விநியோகம் செய்வதற்காக 42 வேகன்களில் 2,500 டன் புழுங்கல் அரிசி இரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

News July 2, 2024

தஞ்சை விவசாயிகளுக்கு அழைப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் சினேகப்ரியா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டு நீர் பாசனத்திற்காக மானியம் வழங்கப்படுகிறது என்றும், மேலும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் தரப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!