India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாட்கோ சார்பில் 12ஆம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு, 3 வருட முழு நேர பட்டபடிப்பு, 1.5 ஆண்டு முழுநேர உணவு பட்டயப்படிப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 1.5 ஆண்டுகள் உணவு தயாரிப்பு சார்ந்த படிப்பு வழங்கப்படும். இது நட்சத்திர விடுதிகள், விமானம், கப்பல் துறை துறை வேலைக்கு வழிவகுக்கும். இதற்கு www.tahdco.com இணையதளத்தில் பதிவு வேண்டும். SHAREIT
தஞ்சையில் 12ஆம் வகுப்பு படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு ஹெச்சிஎல் மூலம் ஒரு வருட பயிற்சி அளிக்கப்பட்டு, நிரந்த வேலை வாய்ப்புடன் இராஜஸ்தானில் உள்ள கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் படித்திட வாய்ப்பு பெற்று தரப்படும். இத்திட்டத்தில் சேர்வதற்கு www.tadhco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள 589 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)
7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT
சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹாஸ்பிடால்டி துறையில் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் சேருவதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். ஷேர் செய்யவும்
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பஸ், ரயில் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள் என பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர். அதன்படி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருப்பு பாதை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் போலீசார் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.