India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் இன்று (02.03.2026) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதை முன்னிட்டு, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும் என்றும், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தஞ்சாவூர், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான, மார்ச் மாத ரேஷன் பொருட்கள், இன்று மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், நேரடியாக வீடுகளுக்கே வந்து விநியோகம் செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 1,183 நியாய விலைக் கடைகள் மூலம் 48,817 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்.01) இரவு 10 முதல் இன்று (மார்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <

தஞ்சை பெரிய கோயிலின் நடை வரும் 3ம் தேதி அன்று சந்திர கிரகணத்தை காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, 7.30 மணிக்கு பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் வழிபாட்டிற்காக நடை திறக்கப்படும் என்று தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 2) தொடங்கப்படவுள்ள +2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 854 போ் பங்கேற்று எழுதுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வுக்காக 111 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. +2 பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

சேலத்திலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் வந்த சுந்தரி (53) என்பவரது கைப்பை துண்டிக்கப்பட்டு, அதிலிருந்த 14 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. வல்லம் அருகே வந்தபோது மர்ம நபர்கள் இந்த கைவரிசையைக் காட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.