India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூரில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணியை கடந்த ஆண்டு முதல்வர் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம் அருகே மேலவஸ்தாசாவடியில் 3.40 ஏக்கரில் ரூ.30.50 கோடி மதிப்பில் தரை மற்றும் 3 தளங்களுடன் 55,000 சதுர அடியில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ள நிலையில், மினி டைடல் பூங்கா அடுத்த மாதம் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுரையை சேர்ந்த ஜோக்லு ராஜ்குமார் என்பவர் மனிதவள மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மருத்துவமனையில் இருந்து பல்வேறு வழிகளில் ரூ.1.5 கோடி கையாடல் செய்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தது. இப்புகாரின் அடிப்படையில் ராஜ்குமாரை குற்றப்பிரிவு போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான 4.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட நன்செய் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இதற்கு குத்தகை தொகை முறையாக செலுத்தாததால் ரூ.3 லட்சம் பாக்கி இருந்தது. இது தொடர்பாக வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில் கோவில் நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு 15 லட்சம் ஆகும்.
தஞ்சாவூரில் இன்று 21 மையங்களில் குரூப் – 1க்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கு 6,160 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் 21 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 4,075 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2,086 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்கள் விகிதம் 66 சதவீதமும், தேர்வு எழுதாதவர்களின் விகிதம் 34 சதவீதமும் ஆகும்.
தஞ்சாவூர் ஒன்றியம் மாதா கோட்டை ஊராட்சியில் உள்ள தூய மிக்கேல் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டப் பணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் உடன் பலர் உள்ளனர்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் 88 திருக்கோயில் உள்ளன. கோவில் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் ரூ.3 கோடி மானியம் அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு ரூ.3 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபான்ஸ்லே முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கனமழையானது பெய்து வருகிறது. அதிகபட்சமாக பூதலூரில் 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தஞ்சாவூரில் 15 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 5 மில்லி மீட்டரும், கும்பகோணத்தில் 13.2 மில்லி மீட்டரும், வல்லத்தில் 2 மில்லி மீட்டரும், குருங்குளத்தில் 2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கல்வி உதவித்தொகைக்கான காசோலையினை முன்னாள் படை வீரர் குடும்பத்தாரிடம் ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் சோ. சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேற்று, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த 13 தாசில்தார்களை இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் துணை தாசில்தார்களாக பணிபுரிந்தவர்கள் பதவி உயர்வு பெற்று பல்வேறு துறைகளுக்கு தனி தாசில்தார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பிக்கள் வரை அனைவரும் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என நேற்று கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா ஆசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நேற்று இரவு முழுவதும் தஞ்சை எஸ்பி மேற்பார்வையில் காவல் துறையினர் துப்பாக்கிகளுடன் சோதனை மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.