India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

தஞ்சையில் நடைபெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ‘கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்று, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் இன்று கலந்து கொள்ள உள்ளேன்’ என தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அருள் (22) என்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 முதல் இன்று (மார்ச்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், தனது ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டினார். அப்போது தனக்கு ஆதரவாக பேசிய பலருக்கும், குறிப்பாக முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் அப்போது பூசி மொழுகுவது போல் பேசியதாகக் குறிப்பிட்ட விஜய், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 04) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜய் பேசுகையில், 2 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பிள்ளைகளின் மருத்துவம், பொறியியல் படிப்புக்கான கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்கும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேசிய விஜய், “மோசடி ஆட்சியில் முக்கியமான ஆட்சி இது. இரண்டாவது முறை ஆட்சிக்கு வரலாம் என நினைக்காதீங்க. திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததே கிடையாது. விஜய்யை ஒழிக்கவே முடியாது.” என கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேசிய விஜய், “எனக்கு விவசாயத்தைப் பற்றித் தெரியாது. நானும் டெல்டாகாரன் என மற்றவர்கள் காதில் டால்டா ஊற்றமாட்டேன். ஆனால், அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்.” என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.