India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலமாக மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைஞர் வேளாண் தொழில் முனைவோர் மானிய திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் எனவும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்ற 30 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியுடையவர்கள் என்று தஞ்சை வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நாளை 19ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. நாளை துவங்கும் புத்தக திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பேருரை ஆற்றுகிறார். இவ்விழாவில் நாடாளுமன்ற, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று 45 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதுபோல மேட்டூர் அணையிலிருந்து, கல்லணைக்கு சுமார் 21,520 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து பாசனத்திற்காக 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் அருகே இன்று விபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். காயமடைந்து சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் சிறப்பு சிகிச்சைக்கு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையை சேர்ந்த சிலர் பாதையாத்திரையாக சென்றபோது விபத்தில் சிக்கினர். இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தோர் சிகிச்சையில் உள்ளனர்.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.