Thanjavur

News August 13, 2024

கல்லணையில் 20,529 கன அடி தண்ணீர் திறப்பு

image

கல்லணையில் இன்று மாலை நிலவரப்படி காவிரியில் 8,509 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 8,506 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 2,513 கன அடி தண்ணீரும் கொள்ளிடத்தில் 1,001 கன அடி தண்ணீரும் என மொத்தம் 20,529 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய வாய்ப்பாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

News August 13, 2024

தஞ்சை கல்லூரிக்கு 5வது இடம்

image

கும்பகோணம் அரசினர் கல்லூரி, தேசியக் கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் 3371 கல்லூரிகளில் 96வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழ்நாடு அளவில் அரசு கல்லூரிகளில் 5வது இடமும் பெற்றுள்ளது என்பதையும் கல்லூரி முதல்வர் முனைவர் மாதவி தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

image

பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 1087 பள்ளிகளில் 50,865 தொடக்கப்பள்ளி மாணவர்களும், நகர்புற பகுதிகளில் 62 பள்ளிகளில் 5,158 என மொத்தம் 1,149 பள்ளிகளில் 56,023 பயன் பெற்று வருகிறார்கள். விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்படி, ஊரகப் பகுதிகளில் 141 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,870 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர் என கலெக்டர் தெரிவித்தார்.

News August 13, 2024

ஆளுநரின் தேநீர் விருந்தை மமக புறக்கணிப்பு

image

பாபநாசம் சட்டமன்றத் உறுப்பினர் ஜவாஹிருல்லா, ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் கொள்கையினைப் பரப்பும் ஒரு பிரச்சாரகர் போலச் செயல்படுகிறாரே தவிர ஆளுநரின் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை. தமிழ்நாடு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார். எனவே ஆளுநரின் அழைப்பை புறக்கணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

ரூ.3.50 லட்சம் வழங்க தஞ்சை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

image

நாஞ்சிக்கோட்டையை சேர்ந்த கவிதா என்பவர், தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனையடுத்து, மருத்துவ செலவினங்களை திரும்ப பெற கவிதா முயன்றபோது, காப்பீடு நிறுவனம் கோரிக்கையை நிராகரித்தது. பின்னர், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அவருக்கு ரூ.3.50 லட்சம் வழங்க, காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

News August 13, 2024

தஞ்சை ஆட்சியர் திருநங்கைகளுக்கு ஆணை

image

தஞ்சையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் நடத்தப்பட்ட முகாமில் பங்கு பெற்ற திருநங்கைகளுக்கு பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2 திருநங்கைகளுக்கு 25% மானியத்துடன் தலா ரூ.1.60.000 வீதம் ரூ.3.20.000 கறவை மாடு மற்றும் ஆடு வளர்ப்புக்கான கடன் ஒப்பளிப்பு ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் இன்று வழங்கினார்.

News August 12, 2024

தஞ்சாவூர் ஆட்சியர் உத்தரவு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 520 மனுக்கள் பெறப்பட்டன. இந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News August 12, 2024

திருநங்கைகளுக்கு கடன் உதவி வழங்கிய ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் சமூக நலன் மற்றும் உரிமை தொகை சார்பில் சுய தொழில் தொடங்கிட கடன் உதவி கேட்டு விண்ணப்பித்த திருநங்கைகளுக்கு, மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் உதவி ஆணையினை இன்று வழங்கினார். இதில் மாவட்ட தொழில் மையம் மேலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News August 12, 2024

நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கண்காட்சி

image

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லூரி சந்தையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சாந்தி,முதல்வர் ஜான்பீட்டர் சாந்தி, முதல்வர் ஜான்பீட்டர், மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News August 12, 2024

தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழையளவு

image

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை அயன்குடியில் அதிகபட்சமாக 30.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், வெட்டிக்காடு பகுதியில் 1.8 மில்லி மீட்டரும், ஈச்சன் விடுதியில் 2 மில்லி மீட்டரும், பேராவூரணியில் 14 மில்லி மீட்டரும், நாகுடியில் 24 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!