Thanjavur

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

News August 14, 2024

ஹோட்டல் மேனேஜ்மென்ட் சேர ஆட்சியர் அழைப்பு

image

சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹாஸ்பிடால்டி துறையில் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் சேருவதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். ஷேர் செய்யவும்

News August 14, 2024

தஞ்சை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பஸ், ரயில் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள் என பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர். அதன்படி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருப்பு பாதை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் போலீசார் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

News August 14, 2024

ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மரகத பூஞ்சோலை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூண்டி ஊராட்சி, பிள்ளையார்பட்டி ஊராட்சியில் மரகத பூஞ்சோலை தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 1 ஏக்கர் பரப்பளவில் வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூஞ்சோலையில் பசுமை நுழைவு வாயில், நடைபாதைகள், கைப்பந்து மைதானம், உடற்பயிற்சி மூலிகை தோட்டம் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என கலெக்டர் தெரிவித்தார்.

News August 14, 2024

தஞ்சை வன்கொடுமை அண்ணாமலை கண்டனம்

image

ஒரத்தநாட்டை சேர்ந்த இளம் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X-தளத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த பதிவில் உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி 4 பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. மேலும் போதைப் பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த இயலாமலும், நடவடிக்கை எடுக்க முடியாமலும் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

News August 14, 2024

மதுபான கடைகள் இயங்க தடை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், கிளப்கள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ஆம் தேதி மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 13, 2024

சிறுபான்மையினர் கடன் பெற சிறப்பு முகாம்

image

சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனி நபர் கடன், சுயஉதவி சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் வருகிற 27ஆம் தேதி தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியிலும், 28ஆம் தேதி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியிலும், பட்டுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கியில் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 13, 2024

மக்களை சந்தித்து நன்றி கூறும் நிகழ்ச்சி

image

நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தஞ்சையில் வெற்றி பெற்ற முரசொலி எம்பி தஞ்சை மாரியம்மன் கோயில், புதுப்பட்டினம், நாஞ்சிக்கோட்டை மற்றும் மாதாகோட்டை பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி கூறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தஞ்சை எம் எல் ஏ டி கே ஜி நீலமேகம் மற்றும் துரை.சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.

error: Content is protected !!