India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை பாப்பநாட்டில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பெண் எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இளம்பெண்ணின் புகாரை ஏற்காமல் அலட்சியப்படுத்தியதால் பெண் எஸ்.ஐ. சூர்யாவை சஸ்பெண்ட் செய்து டிஜிபி ஆணையிட்டுள்ளார். எஸ்.ஐ. சூர்யா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சையை சேர்ந்த தமிழரசன்(24) என்பவர், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை -திருவையாறு புறவழி சாலையில் சென்றுள்ளார். அப்போது, தமிழரசன் மற்றும் அவரது காதலியை வழிமறித்த 4 நபர்கள், அவர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் ரூ.3,000 பறித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கள்ளப் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபு, மணிகண்டன், சார்லஸ், வல்லரசன் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
பட்டுக்கோட்டை அடுத்த நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரத்தநாடு அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் அண்ணா குடியிருப்பு பகுதியில் உள்ள 5 மாட்டு இறைச்சி கடைகளை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது உரிமம் இல்லாமலும் மாட்டு இறைச்சி கழிவுகள் 1900 கிலோ திறந்த நிலையில் தொற்று நோய் ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர், தரமற்ற மாட்டிறைச்சி விற்ற கடைகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் வெளியே செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. SHARE NOW!
தஞ்சை அரண்மனை வளாக தார்பார் கூடத்தில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மேலும், பணிகள் முன்னேற்றம் குறித்தும், ரூபாய் 3.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புணரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்தும், இராச இராசன் மணிமண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் நேற்று கலெக்டர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, இன்று பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக பேராவூரணியில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை பேராவூரணியில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழைக் பதிவாகி உள்ளது. மேலும், கும்பகோணத்தில் 2 மில்லி மீட்டரும், வெட்டிக்காடு பகுதியில் 2.8 மில்லி மீட்டரும், அயன்குடியில் 4.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனையடுத்து பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அவரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பெண் போலீஸ் எஸ்.ஐ கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு உடனடி சட்ட உதவி வழங்காமல் அலைக்கழிக்க செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் பாப்பாநாடு பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றி தஞ்சை எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் அரண்மனை வளாக கலைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் இன்று (17.08.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தஞ்சாவூர் அரண்மனை வளாக தர்பார் கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கேட்டு அறிந்தார். நிகழ்ச்சியில் மாநகர செயற்பொறியாளர் சோமகணி உதவி பொறியாளர் மணிகண்டன் தினேஷ், தனசேகர் உள்பட பலர் உடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.