Thanjavur

News August 25, 2024

அரவைக்காக 2,000 டன் நெல் மதுரைக்கு அனுப்பி வைப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்த நெல் மூட்டைகள் லாரிகள் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2,000 டன் நெல் அரவைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

News August 25, 2024

திருவோணத்தில் மூதாட்டி அடித்துக் கொலை

image

திருவோணத்தை அடுத்த உஞ்சியவிடுதியை சேர்ந்தவர் ஆயிராசு. கணவர், குழந்தைகள் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. நேற்றும் தகராறு ஏற்படவே பக்கத்து வீட்டுக்காரர் செல்வராசு அவரை தாக்கியதில் ஆயிராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவோணம் காவல்துறையினர் செல்வராசை கைது செய்தனர்.

News August 25, 2024

கட்டாய திருமணம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மீட்பு

image

ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமிக்கும் 27 வயதுடைய உறவுக்கார இளைஞருக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 1098க்கு புகார் வந்ததையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு தஞ்சையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 25, 2024

தஞ்சாவூா் ஆட்சியர் அழைப்பு

image

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடா்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம். எனவே விவசாயிகள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News August 24, 2024

கும்பகோணம் கோயில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு

image

சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறை சார்பில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோயில்களில் இன்று (24/08/2024) ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கோயில்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் பழமை மாறாமல் ஆவணப்படுத்தப்படும் என்று கி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு தெரிவித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News August 24, 2024

பேராவூரணியில் ரூ 29.23 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டிடங்கள் திறப்பு

image

பேராவூரணி தொகுதியில் ஆதிசக்தி விநாயகர் கோயில் விழா மேடை ரூ. 10.5 லட்சத்திற்கும், கதலிவனேஸ்வரர் கோவில் விழா மேடை ரூ.10 லட்சத்திற்கும், ஆண்டிக்காடு பொது விநியோகத் திட்ட கட்டடம் ரூ.9.18 லட்சத்திற்கும், மொத்தம் ரூ. 29 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடங்களை பேராவூரணி எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

News August 24, 2024

தஞ்சையில் வேலை வாய்ப்பு முகாம்

image

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை தேடும் பெண்களுக்காக சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 29 காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் ஒசூரில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 1,500க்கும் அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. என தஞ்சை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

கும்பகோணத்தில் போலி மதுபான கூடம்

image

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (46) என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கும்பகோணம் மது விலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை சேர்ந்த போலீஸார் அதிரடி சோதனை செய்தனர். இதில் சையது இப்ராஹிம் மற்றும் போலி மதுபானம் வாங்க வந்த 2 பேர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

News August 24, 2024

இன்ஸ்டாவில் காதலியின் ஆபாச புகைப்படம் – கைது

image

தஞ்சையை சேர்ந்த 26 வயது இளம்பெண் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவரை கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், மணிவண்ணன், தனது காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் படி போலீசார் மணிவண்ணனை கைது செய்தனர்.

News August 24, 2024

தஞ்சாவூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 30ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!