Tenkasi

News November 29, 2024

வீ.கே.புதூர்: செல்போன் டவரில் பேட்டரி திருடிய பெண்கள் கைது

image

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், BSNL நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இந்த டவரில் பேட்டரி திருடுபோனது குறித்து மேலாளர் ராஜ் வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட விஜயலட்சுமி, மாடத்தி, கிருபா ஆகிய 3 பெண்களை போலீசார் நேற்று(நவ.,29) கைது செய்துள்ளனர்.

News November 29, 2024

தென்காசி: கொலை குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

image

தென்காசி மாவட்டம் மேல மெஞ்ஞானபுரத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு சாமுவேல் துரைபாண்டி(70) என்பவரை கொலை செய்த வழக்கில் மேல மெஞ்ஞானபுரம் ஏழுமலை(45) என்பவரை குற்றாலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நேற்று(நவ.,28) வந்தபோது, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி மனோஜ் குமார் தீர்ப்பளித்தார்.

News November 28, 2024

பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய MLA

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று(நவ.27) பிறந்த மூன்று குழந்தைகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையிலான திமுகவினர் இணைந்து தங்க மோதிரம் அணிவித்தனர். இதில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News November 28, 2024

தமிழ்நாடு முழுவதும் டிச.,11-ல் ஆர்ப்பாட்டம்: வைகுண்ட ராஜா

image

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு குமரி மண்டல தலைவரும், தென்காசி மாவட்ட தலைவருமான டிபிவி வைகுண்ட ராஜா இன்று(நவ.,28) வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் டிச.,11-ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 28, 2024

கடையத்தை சேர்ந்தவர் தூத்துக்குடி பொறுப்பாளராக நியமனம்

image

காங்., கமிட்டி மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன் நேற்று(நவ.,27) வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட காங்., கமிட்டி தலைவருடன் இணைந்து செயல்பட்டு கிராம காங்., கமிட்டிகள் கட்டமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு கடையத்தை சேர்ந்த தமிழ்நாடு காங்., இளைஞரணி பொதுச்செயலாளர் மாரி குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News November 28, 2024

தென்காசி: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக, சமூக நீதிக்கான ‘தந்தை பெரியார்’ விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ரூ.5 லட்சம் தொகையும், தங்க பதக்கமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இவ்விருதுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிச.,12-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நேற்று தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 28, 2024

சங்கரன்கோவில்: படைப்புழுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் டிப்ஸ்!

image

சங்கரன்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் திருச்செல்வன் நேற்று(நவ.,27) வெளியிட்ட செய்தி குறிப்பில், மக்காச்சோளப் பயிரில் படை புழுக்கள் பயிரின் இளம் பருவத்தில் இலைகள் மற்றும் குருத்துப் பகுதியை சேதப்படுத்துகின்றன. இதை தடுப்பதற்கு, உழவின்போது வேப்ப புண்ணாக்கு பயன்படுத்த வேண்டும். 1 கிலோ விதைக்கு 4 மில்லி சையாண்டி புரோல் பயன்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

News November 28, 2024

தென்காசி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள்

image

தென்காசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் நவ.27 இரவு 10 மணி முதல் நவ.28 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100.

News November 27, 2024

தென்காசியில் நவ.,29 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நவம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவ.,29ஆம் தேதி, காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் குறிப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

News November 27, 2024

தென்காசி: தனித்தேர்வர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் இடைநிலை பொதுத்தேர்வு(SSLC) எழுதிய தனித்தேர்வர்கள், மார்ச் 2017 முதல் ஜூன்/ ஜூலை 2020 வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித்தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 90 நாட்களுக்குள், தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டுடன் திருநெல்வேலி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

error: Content is protected !!