Tenkasi

News March 18, 2025

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்: அமைச்சர்

image

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி நேற்று சட்டசபையில் பேசியதாவது, குற்றாலத்தில் இரவு பகல் என அனைத்து நேரமும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக இரவு 7 மணி முதல் அனுமதி மறுக்கப்படுகிறது என்றார். பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், குற்றாலம் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

News March 18, 2025

தென்காசியில் மிலிட்டரி கேண்டின்: ராணி ஸ்ரீகுமார் MP வலியுறுத்தல்

image

தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் நேற்று நாடாமன்றத்தில் பேசியபோது, மாவட்டத்தில் ஏராளமான முன்னாள் ராணுவத்தினரும் அவர்களது குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். எனவே அவர்கள் நலன் கருதி தென்காசி மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் வசதிக்காக சிஎஸ்டி மற்றும் ஈசிஎச்எஸ் கேண்டீன் விரைந்து அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.

News March 18, 2025

பதிவு செய்தால் மட்டுமே பணம்! மார்ச் 31 கடைசி நாள்

image

பிரதமரின் கௌரவ நிதி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற ‘அக்ரி ஸ்டேக்’ தளத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதன் வாயிலாக விவசாயிகளின் நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 31க்குள் பதிவு செய்வோருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். தென்காசி மாவட்டத்தில் 40,051 பேர் இதில் பயன்பெறும் நிலையில், தற்போது வரை 46% பேர்தான் பதிவு செய்துள்ளனர். தெரியாதவங்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 18, 2025

தென்காசி: இறப்பிலும் பிரியாத கணவன் – மனைவி!

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கூட தெருவில் குடியிருக்கும் சங்கரன் மனைவி கோமு(90). இவர் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்துவிட்டு இரவில் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் கணவர் சங்கரனும்(95) அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார். கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

News March 18, 2025

முன்னாள் படை வீரர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம்

image

தென்காசி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்களிடம் குடும்பத்தினர் நலனுக்காக சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் (20.03.2025) அன்று முற்பகல் 11.00 மணிக்கு தென்காசி மலையான் தெருவில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில், மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2025

ரூபாய் 23,000 சம்பளத்தில் வேலை – அப்ளை பண்ணுங்க

image

தென்காசி தேசிய நலவாழ்வு குடும்பம் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு இயன்முறை மருத்துவர், பார்வை மருத்துவர், உளவியலாளர், ஒலியியல் நிபுணர், பேச்சு சிகிச்சை நிபுணர், ஆய்வக நுட்பனர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தென்காசி கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாதம் ஊதியம் ரூ-13,000 முதல் ரூ-23,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <>இங்கே <<>>க்ளிக் செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு *ஷேர் பண்ணுங்க*

News March 17, 2025

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை உச்ச நீர்மட்டம் – 85 அடி, நீர் இருப்பு – 62.20 அடி; ராமநதி அணை உச்ச நீர்மட்டம் – 84 அடி, நீர் இருப்பு – 52.50அடி; கருப்பா நதி அணை உச்சநீர் மட்டம் – 72 அடி, நீர் இருப்பு – 29.53அடி; குண்டாறு அணை உச்சநீர் மட்டம் – 36.10, நீர் இருப்பு 27.12 அடி; அடவிநயினார் அணை உச்சநீர் மட்டம் – 132 அடி, நீர் இருப்பு 37.50 அடியாக உள்ளது.

News March 17, 2025

தென்காசியில் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று(மார்ச் 17) மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 17, 2025

தென்காசி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்  விவரம்

image

தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இரவு நேர ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்று (16.03.25) தென்காசி புளியங்குடி ஆலங்குளம் சங்கரன்கோவில் போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்கு மேற்கொண்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!