India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி தேசிய நலவாழ்வு குடும்பம் திட்டத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு ஒலியியல் நிபுணர் & பேச்சு சிகிச்சை நிபுணர் பணிக்கு நாளை மறுநாள் (மார்ச்-28) விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சு மற்றும் மொழி நோயியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியம் 23,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யவும். *ஷேர் பண்ணுங்க*
நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் இன்று(மார்ச் 26) காலை உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் காலமானர். இவர் அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அதிமுக நிர்வாகிகள் உட்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் 1977-ல் அதிமுக சார்பில் ஆலங்குளம் & 2006-ல் திமுக சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் சிற்றாறு வடிவ கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய சங்கங்களில் தலைவர் மற்றும் ஆட்சி மன்ற தொகுதி உறுப்பினர்கள் சங்கங்களுக்கான பதவிகளை நிரப்புவதற்கான வேட்பு மனுக்களை அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று கேட்டுக்கொண்டார் .
தென்காசி மாவட்டத்திற்கு இரவு நேரம் ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகின்றனர் மேலும் இன்று (25.3.25) புளியங்குடி சங்கரன்கோவில் ஆலங்குளம் தென்காசி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. உங்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி உட்பட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 315 காலிப் பதவியிடங்களுக்கும் தற்செயல்/இடைக்காலத் தேர்தல்களை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. மாவட்ட அளவில் மேற்படி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். *ஷேர்
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு (29.03.2025) அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் உலக தண்ணீர் தின கருப்பொருள் மற்றும் ஊராட்சி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கேளையாப்பிள்ளையூர் கிராமத்தில், தங்கள் முன்னோர்கள் கூறியதற்கு இணங்க கடந்த 6 தலைமுறைகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடாமல் உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், தை மாதம் மூன்றாம் வாரத்தில் உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து தாங்கள் கொண்டாடுவதாகவும், வீடுகளுக்கு முன் பொங்கல் வைப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு மனுக்களை அளிக்குமாறு ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்
தமிழகத்தில்அரசு பிளஸ் ஒன்,பிளஸ் டூ வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாசுதேவநல்லூர் கோட்டை தெருவை சேர்ந்த கவின் பிரதாப் (17) பிளஸ் ஒன் மாணவர் நேற்று நடைபெற்ற வணிகவியல் தேர்வு எழுதியபோது நெஞ்சுவலிஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் வாசுதேவநல்லூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Sorry, no posts matched your criteria.