Tenkasi

News January 8, 2025

செய்தியாளர் மறைவுக்கு அமைச்சர் இரங்கல்

image

கீழப்பாவூர் ஒன்றியம் ,பெத்தநாடார் பட்டியைச் சேர்ந்த செய்தியாளர் செல்வன் (61) உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் .அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் இன்று (ஜன.7) இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், பத்திரிக்கை நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

நாளை திமுக கலந்துரையாடல் கூட்டம்

image

ஆலங்குளம் தொகுதியில் திமுக பாகமுகவர்கள் பி.எல்.ஏ. (2), பி.எல்.சி. முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஜன.8) நடைபெறவுள்ளது. ஆழ்வார்குறிச்சி, கல்யாணிபுரம், பள்ளகால், பாப்பாக்குடி, சிங்கம்பாறை, முக்கூடல், ஆலங்குளத்தில் நாளை (ஜன.8) மாலை 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தொகுதி பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், பேரூர் செயலர்கள் பங்கேற்கின்றனர்.

News January 7, 2025

தென்காசி அரசு மருத்துவமனைக்கு முதலிடம்

image

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதியுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் நல பிரிவில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் வசதிகளை ஆய்வு செய்து தேசிய அளவில் வழங்கப்படும் LAQSHYA, MUSQAN சான்றினை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான ஆய்வு  முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தென்காசி மருத்துவமனை தேசிய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது

News January 7, 2025

தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

image

பகுஜன் சமாஜ் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம். பகுஜன் சமாஜ் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளராக கடையம் பகுதியை சேர்ந்த மு.கஜேந்திரன் என்பவர் இருந்து வந்தார். இந்நிழலையில், அவர் கட்சியின் விதிமுளைகளை மீறியதாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து கட்சியின் மாநில தலைமை உத்தரவின் பேரில் மாநில செயலாளர் தேவேந்திரன் நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

News January 7, 2025

அமைச்சர் நேருவிடம் மு.மா. திமுக செயலர் கோரிக்கை

image

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் சென்னையில் இன்று (ஜன.7) நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் குடிநீர் வடிகால் துறை அமைச்சர் நேருவை சந்தித்து மனு அளித்தார். அதில் கடையநல்லூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென தெரிவித்திருந்தார். அப்போது மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், காசி தர்மதுரை சுதா மோகன்லால்,சாமி துரை, ஸ்டீபன் சத்யராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

News January 7, 2025

கடையம் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கும் கலெக்டர்

image

தென்காசி மாவட்டம் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் வரும் சனிக்கிழமை(11ஆம் தேதி) அன்று பள்ளி ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில் கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்துகொள்ள உள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2025

கடையம்: ஊத்து மலை இளைய ஜமீனுக்கு மா.செ. அழைப்பு

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரவண சமுத்திரத்தை சேர்ந்தவரான, முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க மாவட்ட செயலாளர் சலீம் இல்ல விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று(ஜன.6) ஊத்து மலையை சேர்ந்த இளைய ஜமீன் முரளி ராஜாவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றார். இதில் கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News January 7, 2025

தென்காசியில் ஆர்ப்பாட்டத்திற்கு தயார் நிலை

image

தமிழக ஆளுநருக்கு எதிராக இன்று(ஜனவரி 7) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு தென்காசி நகர் மன்ற தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும ரயில்வே நிலையம் பகுதியில் ஏற்பாடுகளை பார்வையிட்டனர். இதில் ஏராளமான திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News January 7, 2025

தென்காசியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(06.01.2025) மாலையில் திடக்கழிவு மேலாண்மை, நெகிழி கழிவு மேலாண்மை மற்றும் மருத்துவக் கழிவு மேலாண்மை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்து பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து பேசினார்.

News January 7, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (06.01.2025) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பட்டியலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொலைப்பேசி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04633-295455, 9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!