Tenkasi

News April 1, 2025

தென்காசி: கடன் தொல்லை தீர்க்கும் கோயில் 

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மலை உச்சியில் ஒக்க நின்றான் பொத்தையில் ராமர் சீதாதேவி அருள்பாலிகின்றனர். சீதாதேவியை தேடி, ராமன் ஒற்றை காலில் நின்று சீதையைத் தேடி நின்ற பகுதிதான் ஒக்க நின்றான் பொத்தை என்று அழைக்கப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சிறப்பான தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. *கடன் தொல்லையில் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணவும்*

News April 1, 2025

சங்கரன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று தொடக்கம்

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் மிகவும் புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீ சங்கர நாராயணசாமி மற்றும் கோமதி அம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான தென் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. இவ்விழா 48 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 1, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (மார்ச்-31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2025

தென்காசி: திருமணவரம்,குழந்தை பாக்கியம் தரும் கோயில்

image

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் இலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் குமாரர் சுவாமியாக அருள் பாலித்து வருகிறார். இங்கு பிரார்த்தனை செய்தால் திருமண வரம், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். பிரார்த்தனை செய்து வேண்டுதல்கள் நிறைவேறியதும், மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியைக் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். *ஷேர் பண்ணுங்க*

News March 31, 2025

தென்காசி: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

தென்காசி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

News March 31, 2025

சங்கரன்கோவிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

image

தென்காசி , சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கீா். இவரது மனைவி மெஹ்ராஜ்(48). இவர், தனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கொடுத்தாராம். அப் பெண் வாங்கிய பணத்தைச் கட்டாததால், அந்த பணத்தை மெஹ்ராஜ் செலுத்தி வந்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்தார். போலீஸாா் விசாரிகின்றனர்.

News March 30, 2025

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு 

image

நாளை (மார்ச்.31) முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல்2 அன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், ஏப்ரல்5 வரை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News March 30, 2025

தென்காசி: கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அண்மை காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை (மார்ச்.31) முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் ஏப்.2 அன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், ஏப்.5 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 30, 2025

கொடிக் கம்பங்களை அகற்ற ஆட்சியர் வேண்டுகோள்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் கொடிக் கம்பங்களை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றுமாறு கேட்டுக்கொண்டார். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் கொடிக்கம்பங்களை அகற்றிவிட்டு செலவினைத் தொகை வசூலிக்கப்படும் என்றார்.

News March 30, 2025

தாட்கோ மூலம் தொழில் தொடங்க வாய்ப்பு – ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில் முனைவோருக்கு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழில் பேட்டைகளில் தொழில் துவங்க வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று  தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>. ஷேர்

error: Content is protected !!